விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பிரபல வட இந்திய சேனலான ‛டைம்ஸ் ஆப் இந்தியா'-வில் மூத்த செய்தி அதிகாரியாக பணியாற்றியவர் அருணாப் கோஸ்வாமி. இவரின் விவாத பேச்சுகள் பிரபலங்கள். பல வருடங்களாக அந்த சேனலில் பணியாற்றியவர், பின்னர் அந்த சேனலுடன் ஏற்பட்ட மனகசப்பால் அதிலிருந்து வெளியேறினார். இப்போது ‛ரிபப்ளிக்' என்ற புதிதாக சேனலை ஆரம்பித்துள்ளார். விரைவில் இந்த சேனல் ஒளிப்பரப்பாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த சேனலில், தமிழ் சேனலில் பிரபலமாக திகழ்ந்த ஹரிகரண் சேர்ந்துள்ளார். தந்தி டிவியில் நீண்ட நாட்களாக மூத்த செய்தி ஆசிரியராக இருந்தவர் ஹரி. பல அரசியல் பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். இதில் முஷாரப், ராஜபக்ஷே போன்ற வெளிநாட்டு அரசியல்வாதிகளும் அடங்குவர். இவரது அழகிய தமிழ் உச்சரிப்பும், அரசியல் விமர்சன விவாதமும் பிரபலமானது. தற்போது இவர் தந்தி டி.வி.யிலிருந்து விலகி ரிபப்ளிக் டிவிக்கு சென்றுள்ளார். முழுக்க முழுக்க ஆங்கில சேனலான இதில், இவர் மும்பையிலிருந்து பணியாற்ற உள்ளார். இத்தகவலை அருணாப்பே உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.