14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
சின்னத்திரை தொகுப்பாளினி ரேகா பத்மநாபன். தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தொடரி படத்தில் தொலைக்காட்சி நிருபராக நடித்துள்ளார். நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ரேகா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
சின்னத்திரை நடிகைகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. சக நடிகர்கள், நடிக்கும்போது மட்டும்தான் நடிகைகளை அம்மா, அக்கா, தங்கையாக பார்க்கிறார்களா? வேஷத்தை கலைத்து விட்டால் வேறு மாதிரி பார்க்கிறார்களோ என்று வருத்தமாக இருக்கிறது.
காதல் தோல்வி, வேலைவாய்ப்பில்லை, ஏமாற்றம் எதற்காகவும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால். தனியாக சென்று படுத்துக் கொண்டு நீங்கள் இறந்து விட்டதாக கற்பனை செய்யுங்கள். உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுவதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உடலை அறுத்து போஸ்மார்ட்டம் செய்வதை பாருங்கள். பின்னர் அதனை எரிப்பதை பாருங்கள். அந்த வேதனையை அனுபவியுங்கள். தற்கொலை எண்ணம் மறைந்து விடும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.