மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 11வது பொதுக்குழு நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் ஜி.சிவன் ஸ்ரீநிவாசன் தலைமை தாங்கினார், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணை தலைவர்கள் பி.கே.கமலேஷ், சோனியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சங்கத்தின் பல்வேறு பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மீது ஊழல் புகார் கூறிவரும் வாராஹி என்பவர் வந்தார். அவரை எப்படி அனுமதித்தீர்கள் என்று சிலர் கேட்டனர். அவர் சங்கத்தின் உறுப்பினராகி உள்ளார் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர் எந்த சீரியலில் நடித்துள்ளார். அவரை எப்படி உறுப்பினராக சேர்த்தீர்கள் என்று சிலர் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து விவாதித்து முடிவெடுப்போம் என்று நிர்வாகிகள் கூறியதைத் தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடந்தது.
முந்தைய நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்தியதற்காக 24 பேருக்கு ஆளுக்கு 10 ஆயிரம் மதிப்பூதியமாக கொடுத்துள்ளது. அவற்றை சங்கத்தின் ஆடிட்டர் கடன் என்று கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார், இதுகுறித்து விவாதத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
சின்னத்திரை நடிகைகள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. எனவே சின்னத்திரை நடிகைகளுக்கு சங்கத்தின் சார்பில் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
வேலை வாய்ப்புகள் குறைந்து வருதால் சின்னத்திரை சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும்.
சங்கத்திற்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதற்கான நிதி திரட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.