மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை கண்டித்து இன்று தமிழ்நாட்டில் முழு அடைப்பு நடக்கிறது. இதில் சின்னத்திரை கலைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் தளபதி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் வன்முறையாளர்கள் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு அவர்களின் சொத்துக்களை நாசம் செய்துள்ளனர். முதல்வரையும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்.
இதனை கண்டித்து 16ந் தேதி (இன்று) நடக்கும் வேலை நிறுத்தத்தில் சின்னத்திரை கலைஞர்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இதையொட்டி சின்னத்தரை தொடர்பான எந்த படப்பிடிப்புகளும் நடைபெறாது என தெரிவித்துக் கொள்கிறோம். காவிரி பிரச்சினையில் முதல்வர் எடுக்கும் முயற்சிகளுக்கு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உடன் நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.