சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
திரைக்கு வந்து சில மாதங்களேயான புத்தம் புதிய திரைப்படம் சேதுபதி. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், வேல.ராமமூர்த்தி, செண்பக மூர்த்தி, விவேக் பிரசன்னா, மாஸ்டர் ராகவன், பேபி தனுஷ்ரா நடித்திருந்தார்கள்.
பிப்ரவரி மாதம் ரிலீசான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முதன் முறையாக டெரர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். நேர்மையும், கண்டிப்பும் மிக்க போலீஸ் அதிகாரி டெரர் மதுரை வில்லன்களை எப்படி போட்டு பொளக்கிறார் என்கிற கதை. பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய எஸ்.யூ.அருண் குமார் இயக்கி இருந்தார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்திருந்தார், தினேஷ் கார்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆரஞ்ச் கிரியேஷன்ஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்திருந்தார். வருகிற 5ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்புகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி. பெரிய திரையில் காண மிஸ் பண்ணினவங்க, சின்னத்திரையில் காண மிஸ் பண்ணிடாதீங்க.