ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியே அதை திறம்பட நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனால் தான் பிரபலமானது என்பது உண்மை.. தவிர அந்த நிகழ்ச்சியின் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணனும் இன்னும் பிரபலமானார் என்பதும் உண்மை.. ஆனால் அந்த நிகழ்ச்சியை கிண்டலடித்தும், அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் சில வசனங்களை கிண்டலடித்தும் சில மாதங்கள் முன்புவரை ஒரு பெரிய அக்கப்போரே நடந்தது.. தற்போது அவை சற்றே அமுங்கியுள்ள நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வேறுவகையில் பிரச்சனை ஒன்று தலைதூக்கியுள்ளது..
இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை இரண்டு தரப்பினர் பங்கேற்கும்போது, இருவரின் அந்தரங்க உண்மைகள் அம்பலமாவது என்பது எழுதப்படாத விதி. தவிர இதுபற்றி கவலைப்படாதவர்கள் தான் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆனாலும் நீதிபதி (!?) லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும் தீர்ப்பு யாரோ ஒருவருக்குத்தான் சாதகமாக இருக்கிறதே, தவிர மற்றவருக்கு பாதகமாகத்தான் அமைகிறது.. அந்தவகையில் இதில் லேட்டஸ்டாக கலந்துகொண்ட நாகப்பன் என்பவர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில நாட்களிலேயே மன உளைச்சல் தாளாமல் தற்கொலை செய்துகொண்டாராம்..
இதற்கு காரணமாக அவரது உறவினர்கள் குறிப்பிடுவது, சம்பந்தப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தங்களது நாகப்பனை, ஜட்ஜ் பாணியில் லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்பவே அவமானப்படுத்தும் விதமாக, மனதை புண்படுத்தும் விதமாக கேள்விகளை கேட்டு நோகடித்து விட்டார் என்றும், அதனால் அவமானம் தாங்காமல் தான் தங்களது நாகப்பன் தற்கொலை செய்துகொண்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்களாம். இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் மேல் வழக்கு தொடுத்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்களாம்.