300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
பிரபல சினிமா நடிகையான குஷ்பு, கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பின்னர், ஜாக்பாட், பூவா தலையா, சிம்ப்ளி குஷ்பூ, நினைத்தாலே இனிக்கும் போன்ற நிகழ்ச்சிகளில் சில சேனல்களுக்காக தொகுத்து வழங்கினார். அதோடு, மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி உள்பட பல தொடர்களிலும் நடித்தார்.
இந்நிலையில், அடுத்தபடியாக அவர் ஒரு சரித்திர தொடரை முன்னணி சேனல் ஒன்றுக்காக தயாரிக்கப்போகிறாராம். இந்த சேனலில் நீண்டகாலமாக முக்கிய அங்கம் வகித்து வருபவரான ராதிகா நடிப்பில் தற்போது வாணி ராணி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், அடுத்தபடியாக ராதிகாவுக்கு கொடுக்கப்பட்டு வந்த நேரத்தில், குஷ்புவின் தொடரை ஒளிபரப்பு செய்து கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாம். அப்படி தான் நடிக்கும் தொடரில் குஷ்பு, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிப்பாளராக மட்டும் செயல்படப்போகிறாராம்.