அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியை துவக்கி வைத்தது விஜய் டி.வி. சினிமா ஸ்டூடியோக்களில் பிரமாண்ட செட் போட்டு அங்கு நடன கலைஞர்களை வரவழைத்து நடன போட்டிகள் நடத்தி, வெற்றி பெறுகிறவர்களுக்கு கணிசமான பரிசு தொகைகளை வழங்குவார்கள். 'அடுத்த பிரபு தேவா யார்', 'மானாட மயிலாட' போன்ற நிகழ்ச்சிகள் உச்சம் தொட்டது,
இதுபோன்ற நிகழ்ச்சிகளை கிராமத்து மக்கள் பார்க்கத்தான் முடியுமே தவிர பங்கேற்க முடியாது. ஆனால் இப்போதும் அதற்கு ஒரு வழிபிறந்திருக்கிறது. நம்ம ஊர் ஆட்டம் என்ற பெயரில் பெப்ர்ஸ் டி.வி ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஒரு கிராமத்தை தேர்வு செய்து ஆட்ட களம் அமைக்கப்படும். அக்கம் பக்கத்து ஊரில் இருந்து நடனம் ஆடத் தெரிந்தவர்களை வரவழைத்து ஆட வைக்கப்படும், அதில் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை சவால்ராமுடன் இணைந்து ரியா தொகுத்து வழங்குகிறார். நடன இயக்குனர் ரவிதேவ் நடுவராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கிராம மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கிறது. விரைவில் இதனை பெரிய அளவில் நடத்தவும் முடிவு செய்திருக்கிறார்கள்.