பிளாஷ்பேக்: இயக்குநர் பி ஆர் பந்துலுவின் 'டூப்'பாக சாண்டோ சின்னப்ப தேவர் நடித்த “திலோத்தமா” | மோகன்லால் தான் எனக்கு எல்லாமே ; 'தொடரும்' பட வில்லன் நெகிழ்ச்சி | ஜனவரியில் வசூலை அள்ளிய படம்.. மே தினத்தில் போனஸ் அனுப்பி குஷிப்படுத்திய தயாரிப்பாளர் | ஒரே நேரத்தில் 3 ஸ்டார் படங்கள்: டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் யார் தெரியுமா? | சினிமாவில் ஜெயிக்க பொறுமை மிக முக்கியம்: நடிகை சாந்தினி 'பளீச்' | நல்ல நேரம், புலன் விசாரணை, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! |
சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியை துவக்கி வைத்தது விஜய் டி.வி. சினிமா ஸ்டூடியோக்களில் பிரமாண்ட செட் போட்டு அங்கு நடன கலைஞர்களை வரவழைத்து நடன போட்டிகள் நடத்தி, வெற்றி பெறுகிறவர்களுக்கு கணிசமான பரிசு தொகைகளை வழங்குவார்கள். 'அடுத்த பிரபு தேவா யார்', 'மானாட மயிலாட' போன்ற நிகழ்ச்சிகள் உச்சம் தொட்டது,
இதுபோன்ற நிகழ்ச்சிகளை கிராமத்து மக்கள் பார்க்கத்தான் முடியுமே தவிர பங்கேற்க முடியாது. ஆனால் இப்போதும் அதற்கு ஒரு வழிபிறந்திருக்கிறது. நம்ம ஊர் ஆட்டம் என்ற பெயரில் பெப்ர்ஸ் டி.வி ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஒரு கிராமத்தை தேர்வு செய்து ஆட்ட களம் அமைக்கப்படும். அக்கம் பக்கத்து ஊரில் இருந்து நடனம் ஆடத் தெரிந்தவர்களை வரவழைத்து ஆட வைக்கப்படும், அதில் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை சவால்ராமுடன் இணைந்து ரியா தொகுத்து வழங்குகிறார். நடன இயக்குனர் ரவிதேவ் நடுவராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கிராம மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கிறது. விரைவில் இதனை பெரிய அளவில் நடத்தவும் முடிவு செய்திருக்கிறார்கள்.