கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் |

சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியை துவக்கி வைத்தது விஜய் டி.வி. சினிமா ஸ்டூடியோக்களில் பிரமாண்ட செட் போட்டு அங்கு நடன கலைஞர்களை வரவழைத்து நடன போட்டிகள் நடத்தி, வெற்றி பெறுகிறவர்களுக்கு கணிசமான பரிசு தொகைகளை வழங்குவார்கள். 'அடுத்த பிரபு தேவா யார்', 'மானாட மயிலாட' போன்ற நிகழ்ச்சிகள் உச்சம் தொட்டது,
இதுபோன்ற நிகழ்ச்சிகளை கிராமத்து மக்கள் பார்க்கத்தான் முடியுமே தவிர பங்கேற்க முடியாது. ஆனால் இப்போதும் அதற்கு ஒரு வழிபிறந்திருக்கிறது. நம்ம ஊர் ஆட்டம் என்ற பெயரில் பெப்ர்ஸ் டி.வி ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஒரு கிராமத்தை தேர்வு செய்து ஆட்ட களம் அமைக்கப்படும். அக்கம் பக்கத்து ஊரில் இருந்து நடனம் ஆடத் தெரிந்தவர்களை வரவழைத்து ஆட வைக்கப்படும், அதில் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை சவால்ராமுடன் இணைந்து ரியா தொகுத்து வழங்குகிறார். நடன இயக்குனர் ரவிதேவ் நடுவராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கிராம மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கிறது. விரைவில் இதனை பெரிய அளவில் நடத்தவும் முடிவு செய்திருக்கிறார்கள்.