ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியை துவக்கி வைத்தது விஜய் டி.வி. சினிமா ஸ்டூடியோக்களில் பிரமாண்ட செட் போட்டு அங்கு நடன கலைஞர்களை வரவழைத்து நடன போட்டிகள் நடத்தி, வெற்றி பெறுகிறவர்களுக்கு கணிசமான பரிசு தொகைகளை வழங்குவார்கள். 'அடுத்த பிரபு தேவா யார்', 'மானாட மயிலாட' போன்ற நிகழ்ச்சிகள் உச்சம் தொட்டது,
இதுபோன்ற நிகழ்ச்சிகளை கிராமத்து மக்கள் பார்க்கத்தான் முடியுமே தவிர பங்கேற்க முடியாது. ஆனால் இப்போதும் அதற்கு ஒரு வழிபிறந்திருக்கிறது. நம்ம ஊர் ஆட்டம் என்ற பெயரில் பெப்ர்ஸ் டி.வி ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஒரு கிராமத்தை தேர்வு செய்து ஆட்ட களம் அமைக்கப்படும். அக்கம் பக்கத்து ஊரில் இருந்து நடனம் ஆடத் தெரிந்தவர்களை வரவழைத்து ஆட வைக்கப்படும், அதில் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை சவால்ராமுடன் இணைந்து ரியா தொகுத்து வழங்குகிறார். நடன இயக்குனர் ரவிதேவ் நடுவராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கிராம மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கிறது. விரைவில் இதனை பெரிய அளவில் நடத்தவும் முடிவு செய்திருக்கிறார்கள்.