பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

கலைஞர் டி.வியில் தி.மு.கழக தலைவர் கருணாநிதியின் கதை, திரைக்கதை வசனத்தில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. 'ராமானுஜர்' தொடரை அடுத்து 'ரோமாபுரி பாண்டியன்' ஒளிபரப்பானது. இதனை குட்டிபத்மினி தயாரித்தார். தனுஷ் இயக்கினார். 2014ம் ஆண்டு ஒளிபரப்பை துவக்கி 2016 ஏப்ரலில் முடிந்தது. மொத்தம் 543 எபிசோட்கள் ஒளிபரப்பானது.
தற்போது கருணாநிதி எழுதிய 'தென்பாண்டி சிங்கம்' நாவலை சீரியலாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்திருக்கிறது. நடிகர், நடிகைகள் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது. இதையும் தனுஷ் இயக்கலாம் என்று தெரிகிறது. பிரமாண்ட செட்டுகள் போடவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.