நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

1997 முதல் 2005 வரை தூர்தர்ஷினில் சக்கைபோடு போட்ட தொடர் சக்தி மான். ஞாயிற்றுகிழமை 12 மணிக்கு ரோட்டில் குழந்தைகளையே காண முடியாது. அந்த அளவிற்கு அந்த சீரியலில் தங்களை பறிகொடுத்து நின்றார்கள். சக்திமான் உடைகள், சக்திமான் பொம்பைகள் என அதைச் சுற்றி வியாபாரங்களும் நடந்தது. சக்திமான் போன்று மாடியிலிருந்து குதித்து உயிர்விட்ட குழுந்தைகளும் உண்டு. அந்த அளவிற்கு சக்தி மிகுந்ததா இருந்தது சக்திமான் தொடர்.
500 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான சக்திமான் தொடர் நிறுத்தப்பட்டு 15 வருடங்களுக்கு மேலாகியும் அந்த குழந்தைதனமான முகம் கொண்ட முகேஷ் கண்ணாவை யாராலும் மறக்க முடியாது. அவருக்கு இப்போது 57 வயதாகிறது. அவர்தான் சக்திமான் தொடரை மீண்டும் ஆரம்பிக போவதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சக்திமானை இன்னும் மக்கள் மறக்கவில்லை. பழைய மாதிரி என்னாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் மீண்டும் சக்திமானாக மாற முடிவு செய்திருக்கிறேன். புதிய தொடர், சக்திமான் கதை விட்ட இடத்திலிருந்து தொடங்கும், அதே குழந்தை குறும்புகளும் இருக்கும். இப்போது வளர்ந்துள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக கொண்டு வர முடியும். இதற்காக டிடி சேனலில் மாலை 5 மணி சிலாட் கேட்டிருக்கிறேன். சோனி, கலர்ஸ், சேனல்களிடமும் பேசி வருகிறேன். என்கிறார் முகேஷ்.