நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
1997 முதல் 2005 வரை தூர்தர்ஷினில் சக்கைபோடு போட்ட தொடர் சக்தி மான். ஞாயிற்றுகிழமை 12 மணிக்கு ரோட்டில் குழந்தைகளையே காண முடியாது. அந்த அளவிற்கு அந்த சீரியலில் தங்களை பறிகொடுத்து நின்றார்கள். சக்திமான் உடைகள், சக்திமான் பொம்பைகள் என அதைச் சுற்றி வியாபாரங்களும் நடந்தது. சக்திமான் போன்று மாடியிலிருந்து குதித்து உயிர்விட்ட குழுந்தைகளும் உண்டு. அந்த அளவிற்கு சக்தி மிகுந்ததா இருந்தது சக்திமான் தொடர்.
500 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான சக்திமான் தொடர் நிறுத்தப்பட்டு 15 வருடங்களுக்கு மேலாகியும் அந்த குழந்தைதனமான முகம் கொண்ட முகேஷ் கண்ணாவை யாராலும் மறக்க முடியாது. அவருக்கு இப்போது 57 வயதாகிறது. அவர்தான் சக்திமான் தொடரை மீண்டும் ஆரம்பிக போவதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சக்திமானை இன்னும் மக்கள் மறக்கவில்லை. பழைய மாதிரி என்னாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் மீண்டும் சக்திமானாக மாற முடிவு செய்திருக்கிறேன். புதிய தொடர், சக்திமான் கதை விட்ட இடத்திலிருந்து தொடங்கும், அதே குழந்தை குறும்புகளும் இருக்கும். இப்போது வளர்ந்துள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக கொண்டு வர முடியும். இதற்காக டிடி சேனலில் மாலை 5 மணி சிலாட் கேட்டிருக்கிறேன். சோனி, கலர்ஸ், சேனல்களிடமும் பேசி வருகிறேன். என்கிறார் முகேஷ்.