அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
1997 முதல் 2005 வரை தூர்தர்ஷினில் சக்கைபோடு போட்ட தொடர் சக்தி மான். ஞாயிற்றுகிழமை 12 மணிக்கு ரோட்டில் குழந்தைகளையே காண முடியாது. அந்த அளவிற்கு அந்த சீரியலில் தங்களை பறிகொடுத்து நின்றார்கள். சக்திமான் உடைகள், சக்திமான் பொம்பைகள் என அதைச் சுற்றி வியாபாரங்களும் நடந்தது. சக்திமான் போன்று மாடியிலிருந்து குதித்து உயிர்விட்ட குழுந்தைகளும் உண்டு. அந்த அளவிற்கு சக்தி மிகுந்ததா இருந்தது சக்திமான் தொடர்.
500 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான சக்திமான் தொடர் நிறுத்தப்பட்டு 15 வருடங்களுக்கு மேலாகியும் அந்த குழந்தைதனமான முகம் கொண்ட முகேஷ் கண்ணாவை யாராலும் மறக்க முடியாது. அவருக்கு இப்போது 57 வயதாகிறது. அவர்தான் சக்திமான் தொடரை மீண்டும் ஆரம்பிக போவதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சக்திமானை இன்னும் மக்கள் மறக்கவில்லை. பழைய மாதிரி என்னாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் மீண்டும் சக்திமானாக மாற முடிவு செய்திருக்கிறேன். புதிய தொடர், சக்திமான் கதை விட்ட இடத்திலிருந்து தொடங்கும், அதே குழந்தை குறும்புகளும் இருக்கும். இப்போது வளர்ந்துள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக கொண்டு வர முடியும். இதற்காக டிடி சேனலில் மாலை 5 மணி சிலாட் கேட்டிருக்கிறேன். சோனி, கலர்ஸ், சேனல்களிடமும் பேசி வருகிறேன். என்கிறார் முகேஷ்.