தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சி.ஜே.பாஸ்கர் இயக்கி வந்த தொடர் ஆதிரா. சின்னத்திரைகளில் ஒளிபரப்பான சீரியல்களில் இந்த சீரியல் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஸ்ரீவாணி, அஞ்சுஅரவிந்த், ஜெய்தனுஷ், அம்பிகா மோகன் உள்பட பலர் நடித்தனர். இந்த தொடரில் பெரும்பகுதி படப்பிடிப்பு கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில்தான் படமாக்கப்பட்டு வந்தது. அதனால் சினிமா படப்பிடிப்புகளுக்கு அவுட் டோரில் முகாமிடுவது போன்று இந்த ஆதிரா தொடருக்காக கேரளாவில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வந்தார் சி.ஜே.பாஸ்கர்.
ஆனால் தற்போது 250 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகியுள்ள ஆதிரா தொடர் இன்னும் ஓராண்டு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் 24-ந்தேதியோடு ஆதிரா தொடர் நிறைவு பெறுவதாக கூறுகிறார்கள். அதை யடுத்து அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் இந்தியில் பெரிய அளவில் நேயர்களின் வரவேற்பை பெற்ற ஒரு டப்பிங் நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறதாம்.