அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

சி.ஜே.பாஸ்கர் இயக்கி வந்த தொடர் ஆதிரா. சின்னத்திரைகளில் ஒளிபரப்பான சீரியல்களில் இந்த சீரியல் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஸ்ரீவாணி, அஞ்சுஅரவிந்த், ஜெய்தனுஷ், அம்பிகா மோகன் உள்பட பலர் நடித்தனர். இந்த தொடரில் பெரும்பகுதி படப்பிடிப்பு கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில்தான் படமாக்கப்பட்டு வந்தது. அதனால் சினிமா படப்பிடிப்புகளுக்கு அவுட் டோரில் முகாமிடுவது போன்று இந்த ஆதிரா தொடருக்காக கேரளாவில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வந்தார் சி.ஜே.பாஸ்கர்.
ஆனால் தற்போது 250 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகியுள்ள ஆதிரா தொடர் இன்னும் ஓராண்டு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் 24-ந்தேதியோடு ஆதிரா தொடர் நிறைவு பெறுவதாக கூறுகிறார்கள். அதை யடுத்து அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் இந்தியில் பெரிய அளவில் நேயர்களின் வரவேற்பை பெற்ற ஒரு டப்பிங் நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறதாம்.