பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

ஜீ தமிழ் சேனல் விரைவில் அதி நவீன அதிரடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறது. மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் கில்லாடிகள் என்பது அதன் டைட்டில் ஜோடிப் பொருத்தம் மாதிரியான நிகழ்ச்சியை புதிய யுக்தியுடன் பல அதிரடியான புதிய அம்சங்களுடன் தயாரிக்கிறார்கள்.
இதில் பத்து ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். காதல் இருக்கும், ரெமான்ஸ் இருக்கும், கேள்விகள் இருக்கும், எல்லாவற்றிலும் ஒருவர் மீது இருக்கும் அன்பை மற்றவர் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். யாருடை காதல் அழுத்தமானதோ அவர்களே வெற்றியாளர்கள். பத்து ஜோடிகளும் செலிபிரிட்டிகள்தான். திருமணமானவர்களாகவும் இருக்கலாம். காதலர்களாகவும் இருக்கலாம்.
இவனுக்கு தண்ணியில கண்டம் படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த தீபக் இப்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரமோசனை ஒரு திரைப்படத்திற்கான புரமோசன் போன்று பிரமாண்டமாக வெளியிட்டிருக்கிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.