ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சி.ஜே. பாஸ்கர் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் ஹாரர் தொடர் ஆதிரா. ஸ்ரீவாணி, அஞ்சு அரவிந்த், ஜெய் தனுஷ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த சீரியல், ஆரம்பத்தில் இருந்தே கேரளாவில் உள்ள சாலக்குடியில்தான் படமாக்கப்பட்டு வருகிறது. காரணம், இந்த அமானுஷ்ய தொடருக்கு ஏற்ற அடர்ந்த காட்டுப்பகுதி லொகேசன்கள் அந்த பகுதியில் அதிகமாக உள்ளதாம். அதனால் வெகுதூரம் செல்லாமல் அடுத்தடுத்த பகுதிகளிலேயே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறதாம்.
அதன்காரணமாக, இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களை நடிகைகளை சினிமா படப்பிடிப்புகளுக்கு அவுட்டோருக்கு அழைத்து செல்வது போன்று கூட்டிச்சென்று அங்கு ஹோட்டல்களில் தங்க வைத்து ஷூட்டிங் நடத்தி வந்தனர். இதன்காரணமாக ஆதிரா சீரியல் பட்ஜெட்கூட எகிறிக்கொண்டே போகிறதாம். ஆனால் அடுத்தபடியாக கதையில் சில மாற்றங்கள் ஏற்படப் போகிறதாம். அதனால், இதுவரை சாலக்குடியில் முகாமிட்டு ஆதிரா சீரியலை படம் பிடித்து வந்த சி.ஜே.பாஸ்கர், யூனிட்டுடன் விரைவில் சென்னை திரும்புகிறாராம். இனிமேல் சென்னையில்தான் படப்பிடிப்பு தொடரப்போகிறதாம்.