போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மாஜி நாயகியான நளினி, 2000-ம் வருடத்தில் கிருஷ்ணதாசி என்ற தொடரில் சீரியலுக்கு வந்தவர் கடந்த 16 ஆண்டுகளில் சுமார் 20 மெகா சீரியல்களில் நடித்து விட்டார். இப்போது சின்ன பாப்பா பெரிய பாப்பாவில் நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் அம்மா நா கோடலா -என்ற தொடரில் கஞ்சத்தனம் மிகுந்த மாமியாராக நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆந்திராவில் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம். அதனால் தெலுங்கு சினிமாவிலும் நளினிக்கு வாய்ப்புகள் குவிகிறதாம். விளைவு, சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து ஐதராபாத்தில் அவர் குடியேறி விட்டார். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலுக்காக மட்டுமே சென்னை வந்து செல்கிறார்.
மேலும், நளினிக்கு யூனிட் சாப்பாட்டைவிட வீட்டு சமையல்தான் ரொம்ப பிடிக்குமாம். அதிலும் விதவிதமான சமையல்களை சமைப்பதில் அவர் கைதேர்ந்தவராம். அதனால் படப்பிடிப்பு இல்லாமல் தான் வீட்டில் இருக்கும் நாட்களில் விரும்பிய உணவுகளை அவரே சமைத்து சாப்பிடுவாராம். வீட்டு நபர்களுக்கும் சமைத்துக்கொடுத்து அசத்துவாராம். அதோடு, தெலுங்கு சீரியல், சினிமாக்களில் நடிக்க செல்லும்போது அவருக்கு மதிய வேளைகளில் வீட்டு சமையலே வந்து விடுமாம். அதைத்தான் அருகில் இருப்பவர்களுக்கும் கொடுத்து தானும் ருசித்து சாப்பிடுவாராம் நளினி.