பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மாஜி நாயகியான நளினி, 2000-ம் வருடத்தில் கிருஷ்ணதாசி என்ற தொடரில் சீரியலுக்கு வந்தவர் கடந்த 16 ஆண்டுகளில் சுமார் 20 மெகா சீரியல்களில் நடித்து விட்டார். இப்போது சின்ன பாப்பா பெரிய பாப்பாவில் நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் அம்மா நா கோடலா -என்ற தொடரில் கஞ்சத்தனம் மிகுந்த மாமியாராக நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆந்திராவில் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம். அதனால் தெலுங்கு சினிமாவிலும் நளினிக்கு வாய்ப்புகள் குவிகிறதாம். விளைவு, சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து ஐதராபாத்தில் அவர் குடியேறி விட்டார். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலுக்காக மட்டுமே சென்னை வந்து செல்கிறார்.
மேலும், நளினிக்கு யூனிட் சாப்பாட்டைவிட வீட்டு சமையல்தான் ரொம்ப பிடிக்குமாம். அதிலும் விதவிதமான சமையல்களை சமைப்பதில் அவர் கைதேர்ந்தவராம். அதனால் படப்பிடிப்பு இல்லாமல் தான் வீட்டில் இருக்கும் நாட்களில் விரும்பிய உணவுகளை அவரே சமைத்து சாப்பிடுவாராம். வீட்டு நபர்களுக்கும் சமைத்துக்கொடுத்து அசத்துவாராம். அதோடு, தெலுங்கு சீரியல், சினிமாக்களில் நடிக்க செல்லும்போது அவருக்கு மதிய வேளைகளில் வீட்டு சமையலே வந்து விடுமாம். அதைத்தான் அருகில் இருப்பவர்களுக்கும் கொடுத்து தானும் ருசித்து சாப்பிடுவாராம் நளினி.