இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
மாஜி நாயகியான நளினி, 2000-ம் வருடத்தில் கிருஷ்ணதாசி என்ற தொடரில் சீரியலுக்கு வந்தவர் கடந்த 16 ஆண்டுகளில் சுமார் 20 மெகா சீரியல்களில் நடித்து விட்டார். இப்போது சின்ன பாப்பா பெரிய பாப்பாவில் நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் அம்மா நா கோடலா -என்ற தொடரில் கஞ்சத்தனம் மிகுந்த மாமியாராக நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆந்திராவில் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம். அதனால் தெலுங்கு சினிமாவிலும் நளினிக்கு வாய்ப்புகள் குவிகிறதாம். விளைவு, சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து ஐதராபாத்தில் அவர் குடியேறி விட்டார். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலுக்காக மட்டுமே சென்னை வந்து செல்கிறார்.
மேலும், நளினிக்கு யூனிட் சாப்பாட்டைவிட வீட்டு சமையல்தான் ரொம்ப பிடிக்குமாம். அதிலும் விதவிதமான சமையல்களை சமைப்பதில் அவர் கைதேர்ந்தவராம். அதனால் படப்பிடிப்பு இல்லாமல் தான் வீட்டில் இருக்கும் நாட்களில் விரும்பிய உணவுகளை அவரே சமைத்து சாப்பிடுவாராம். வீட்டு நபர்களுக்கும் சமைத்துக்கொடுத்து அசத்துவாராம். அதோடு, தெலுங்கு சீரியல், சினிமாக்களில் நடிக்க செல்லும்போது அவருக்கு மதிய வேளைகளில் வீட்டு சமையலே வந்து விடுமாம். அதைத்தான் அருகில் இருப்பவர்களுக்கும் கொடுத்து தானும் ருசித்து சாப்பிடுவாராம் நளினி.