போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சீரில்களைப் பொறுத்தவரை பெண்ணாதிக்கம்தான் என்றாலும், சமீபகாலமாகஅந்த நிலைமாறி பல சீரியல்கள் ஆண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் சீரியல்களில் பெண்ணாதிக்கம் குறைந்து வருகிறது என்றே நான் சொல்வேன் என்கிறார் நடிகர் பரத். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
கடந்த 9 ஆண்டுகளாக நான் கலைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறேன். உயிரோசை என்ற படத்தில் நாயகனாக நடித்தேன். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. மேலும் சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்தேன். இருப்பினும், சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறேன். அந்த வகையில், பல சீரியல்களில் ஹீரோ, வில்லன் என அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இப்போது பொம்மலாட்டம் தொடரில் ராஜேஷ் என்ற லீடு ரோலில் நடிக்கிறேன். பாசிட்டீவான வேடம். அதேபோல், வாணி ராணி தொடரில் நெகடீவ் ரோலில் நடித்தேன். இப்படி ஒவ்வொரு சீரியல்களிலும் ஒவ்வொருவிதமான வேடங்களில் நடித்து சின்னத்திரை உலகில் எனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறேன். என்றாலும் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்பதே எனது ஆசை என்பதால், சீரியல்களிலும் எனது நடிப்பில் சினிமா ஸ்டைலே வெளிப்படுகிறது. அதை நானாக வெளிப்படுத்தாத போதும் என்னையுமறியாமல் அந்த பாணி வந்து விடுகிறது. இதை என்னுடன் நடிக்கும் சக நடிகர்களே சொல்கிறார்கள்.
அதோடு எனக்கு நிறைய ரசிகர்களும் இருக்கிறார்கள். சிலர் நேரில் என்னை பார்க்கும்போது எனது நடிப்பு பற்றி தங்களது கருத்தினை சொல்கிறார்கள். பலர் இணைய பக்கத்தில் வந்து எனது நடிப்பை விமர்சிக்கிறார்கள். முகம் தெரியாத அந்த ரசிகர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு அதற்கேற்ப சீரியல்களில் எனது நடிப்பை பிரதிபலித்து வருகிறேன். அந்த வகையில், ரசிகர்கள் விரும்பும் நடிகராக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
மேலும், ஆரம்ப காலத்தில் சீரியல்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளில் உருவாக்கப்பட்டன. ஆனால் இப்போது உறவுகள், திருமதி செல்வம் என சில சீரியல்கள் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சீரியல்களில் பெண்ணாதிக்கம் என்பது படிப்படியாக குறைந்து அனைவருக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கும் நிலை மாறி வருகிறது. இது வரவேற்க வேண்டிய விசயம் என்று கூறும் பரத், சின்னத்திரையில் பல இயக்குனர்கள் தனக்கு பிடித்தமானவர்கள்தான் என்றாலும், சி.ஜே.பாஸ்கர், சிவா, ஒ.என்.ரத்னம், குமரன் ஆகியோர் தன்னை பாதித்த இயக்குனர்கள் என்கிறார்.