போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
டைரக்டர் பாலாவின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், 90 வயது கிழவியாகவோ, குஷ்டரோகியாகவோகூட நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார் சின்னத்திரை நடிகை நாகலட்சுமி. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
தான் நடித்து வரும் கேரக்டர்கள் பற்றியும், அதில் தனக்கு கிடைத்த மனதிருப்தி பற்றியும் அவர் கூறுகையில்,
நான் பெரும்பாலும் நெகடீவ் வேடங்களிலேயே நடித்து வந்தபோதும் அழகி சீரியலில் பாசிட்டீவான ரோலில் நடித்தேன். அய்யோ பாவம் என்று நேயர்கள் எனக்காக பீல் பண்ணினார்கள். அதற்கு முன்பு வரை என்னம்மா இப்படி யெல்லாம் பண்றே என்று சொன்னவர்கள். அந்த அழகி சீரியலில் உன்னை ஏம்மா இப்படியெல்லாம் பண்றாங்க என்று எனக்காக பீல் பண்ணினார்கள். அதாவது, செண்டிமென்டான வேடங்களில் நடிக்கும்போது ஒரு லிமிட் இருக்கும். அதை தாண்டி நடிக்க முடியாது. ஆனால் அதிரடியான வேடங்கள் என்கிறபோது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தலாம். அதனால்தான் நான் வில்லி வேடங்களில் எதிர்பார்க்காத மாறுபட்ட நடிப்பை ஒவ்வொரு சீரியல்களிலும் வெளிப்படுத்தி வருகிறேன். மேலும், என்னதான் பாசிட்டீவ் வேடத்தில் நடிக் கும்போது பேசப்பட்டபோதும் நெகடீவ் வேடங்கள் சிறப்பாக அமைகிறபோதுதான் பாசிட்டீவ் வேடங்களில் நடிப்பவர்களுக்கு பெயர் கிடைக்கும்.
மேலும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு உள்ளது. நான் மேடை நாடகங்களில் நடித்து வந்த காலத்தில் அதுபோன்ற கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். ஆனால் சீரியலில் வந்தபிறகு என்னை யாரும் அந்த மாதிரி வேடங்களில் நடிக்கவைக்க வில்லை. ஆனால், எனக்கு அவ்வப்போது இல்லத்தரசிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
தற்போது சபீதா என்கிற சபாபதி, மெல்லத்திறந்தது கதவு போன்ற சீரியல்களில் நடித்து வருகிறேன். எனது சீரியல்களுக்கு நானே டப்பிங் பேசி விடுகிறேன். காரணம், எனக்கு அப்போதுதான் புல் பீல் கிடைக்கும். அதோடு, தெலுங்கில் ஒரு சீரியலில் மாற்றுத்திறனாளியாக நடித்தேன். வீல் சேரில் உடகார்ந்து கொண்டு வில்லத்தனம் செய்யும் வேடம். அதில் பன்னீர் புஷ்பங்கள் சுரேசும் நடித்திருந்தார். அந்த சீரியல் எனக்கு பெரிய அளவில் திருப்தி கொடுத்தது. அதேபோல் நாகா இயக்கிய சிதம்பர ரகசியம் சீரியலில் 80 வயது பாட்டியாக நடித்த வேடமும் எனக்கு திருப்தியாக அமைந்தது.
மேலும், விதி படத்தில் சுஜாதா நடித்தது போன்ற வழக்கறிஞர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்டகால ஆசை. எமோசனல், போராட்டம் என பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அவர் நடித்திருந்தார். அதுமாதிரி வேடத்துக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். சில நாடகங்களில் வழக்கறிஞராக நடித்திருக்கிறேன். ஆனால் சீரியல்களில் இதுவரை கிடைக்க வில்லை. அதோடு, ஆரம்ப காலத்தில் நான் சில படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம், சீரியல்களில் பாப்புலராக இருக்கும் நடிகைகளுக்கு சினிமாவில் யாரும் சான்ஸ் தருவதில்லை.
ஆனால் எனக்கு டைரக்டர் பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர் படத்தில் ஒரு ஷாட் கொடுத்தாலும் நடிப்பேன். அவர் சொல்லிக்கொடுப்பதில் 40 சதவிகிதம் நடித்தாலே போதும். அதுவே 100 சதவிகிதத் துக்கு சமம். நடிகர் நடிகைகளிடம் இருக்கும் திறமையை முழுசாக வெளியே கொண்டு வந்து விடுவார். 90 வயது கிழவியாகவோ, குஷ்டரோகியாவோ என்னை எப்படி அவர் காண்பித்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.
அவரது படங்களில் சேது, பிதாமகன், நான் கடவுள், தாரைத்தப்பட்டை என ஒவ்வொரு படமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். பிதாமகனில் லைலாவை துறுதுறுவென்ற கேரக்டரில் அழகாக நடிக்க வைத்திருந்தார். நான் பாலா படங்களை ஆர்ட்டிஸ்டாகத்தான் பார்ப்பேன். அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்வேன் என்கிறார் நாகலட்சுமி.