ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செல்வி, இளவரசி, அண்ணாமலை, உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கியமான வேடங்களில் நடித்தவர் சாய் பிரஷாந்த். நேரம், தெகிடி, வடகறி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 30 வயதான சாய் பிரஷாந்த், வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். கடந்த ஆண்டுதான் உடன் நடித்த நடிகையை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று சாய் பிரஷாந்த் வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் தாயாரிடம் பேசியிருக்கிறார்.
அதோடு, தற்கொலை செய்து கொண்ட சாய் பிரஷாந்த் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் தான் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சாய் பிரஷாந்த் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், கணவன், மனைவிக்கு இடையே எதுவும் பிரச்னையா.? என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.