பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
செல்வி, இளவரசி, அண்ணாமலை, உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கியமான வேடங்களில் நடித்தவர் சாய் பிரஷாந்த். நேரம், தெகிடி, வடகறி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 30 வயதான சாய் பிரஷாந்த், வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். கடந்த ஆண்டுதான் உடன் நடித்த நடிகையை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று சாய் பிரஷாந்த் வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் தாயாரிடம் பேசியிருக்கிறார்.
அதோடு, தற்கொலை செய்து கொண்ட சாய் பிரஷாந்த் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் தான் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சாய் பிரஷாந்த் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், கணவன், மனைவிக்கு இடையே எதுவும் பிரச்னையா.? என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.