Advertisement

சிறப்புச்செய்திகள்

அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சீரியல் அண்ணனை நிஜ அண்ணனாக நினைக்கிறேன்! - நடிகை ஷாமிலி

04 மார், 2016 - 10:21 IST
எழுத்தின் அளவு:
I-treating-Serial-brother-as-real-brother-says-Shamili
Advertisement

பாசமலர் சீரியலில் நடிக்கும் ஸ்டாலின் அண்ணனை என் சொந்த அண்ணன் போன்றே நினைத்து நடித்து வருகிறேன். அவர் தேனியில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். அனைவரிடமும் பாசமாக பழகுவார். அதனால் எமோஷனல் காட்சிகளில் அவருடன் நடிக்கும்போது கண்ணில் இருந்து எளிதாக கண்ணீர் வந்து விடும். அதனால் அவருடனான செண்டிமென்ட் காட்சிகளில் க்ளிசரின் போடாமல் அழுது நடிக்கிறேன் என்கிறார் நடிகை ஷாமிலி. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


தற்போது என்னென்ன தொடர்களில் எந்தமாதிரியான வேடங்களில் நடித்து வருகிறீர்கள்?


ரோமாபுரி பாண்டியன் தொடரில் பாண்டிய நாட்டு அரசரின் தங்கை மகளாக கலைவாணி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். இப்போதைய காதல் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், எம்எம்எஸ் என்று உள்ளது. ஆனால் சரித்திர கால காதல் பார்வைகள் பரிமாறி, தூது அனுப்பி அதன்பிறகுதான் காதல் வருகிறது. ரொம்ப டீசன்டான லவ்வாக உள்ளது. அந்த வகையில், மகாபாரதம், ரோமாபுரி பாண்டியன் சீரியல்களுக்காக அம்பு விடுவது, குதிரையேற்றம் போன்றவற்றையும் பயிற்சி எடுத்து நடித்தேன். இந்த மாதிரி காட்சிகளில் நடித்து திரையில் பார்க்கும் போது நான் சிறப்பாக நடித்திருப்பதாக தோன்றுகிறது. ரோமாபுரி பாண்டியன் தொடருக்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருக்கிறார். தேன்அமிர்தம் பாய்வது போல் ஒவ்வொரு வசனங்களும் உள்ளது. அதோடு, 63 நாயன்மார்கள், பொன்னூஞ்சல், பாசமலர், பிரியசகி என பல சீரியல்களில் தற்போது நடித்து வருகிறேன்.


சரித்திர கதைகளில் நடிக்கும் அனுபவம் எப்படி உள்ளது?


சரித்திர காலத்தை நாம் பார்த்ததில்லை. அதனால் இப்போது அந்த கால கட்டத்து கதையில் நடிப்பது அந்த காலத்துக்கே சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அந்த காலத்தைப்பற்றி புரிந்து கொள்ளவும் முடிகிறது. முக்கியமாக, அப்போதைய காஸ்டியூம், கழுத்து நிறைய நகைகளை அணிந்து கொண்டு நடிப்பது புதுமையாக உள்ளது. சரித்திர கதைகளை என்சாய் பண்ணி நடிக்கிறேன்.


உங்களுக்கு நீங்கள்தான் டப்பிங் பேசுகிறீர்களா?


ஒரேநேரத்தில் பல சீரியல்களில் நடிப்பதால் நேரம் கிடைக்கவில்லை. அதனால் டப்பிங் ஆர்ட்டிஸ்களுக்கு வேலை கொடுத்து விட்டேன். மேலும், எனது லிப் மூவ்மெண்டுக்கு டப்பிங் கொடுப்பதற்கு எளிதாக இருப்பதாக எனக்கு டப்பிங் பேசுபவர்கள் கூறியிருக்கிறார்கள். அதேசமயம், ஓம் சாந்தி ஓம் படத்தில் நான் நடித்த கேரக்டருக்கு நானே டப்பிங் பேசினேன். 2 வருடத்துக்கு முன்பு பென்சில் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தேன். கதை மூவ் ஆவதற்கான அச்சாணியான வேடத்தில் நடித்திருக்கிறேன். மற்றபடி, சினிமாவில் யாரிடமும் நானாக போய் வாய்ப்பு கேட்டு நிற்பதில்லை. அவங்களாக பார்த்து கொடுத்த வேடங்களில்தான் நடித்து வருகிறேன்.


தற்போது நடிப்பதில் எந்த சீரியலில் உங்களது நடிப்பு பெரிதாக ரசிகர்களை பாதித்துள்ளது?


எல்லா சீரியல்களிலுமே நல்ல வேடங்களில்தான் நடித்து வருகிறேன். அந்த மாதிரி வேடங்களைத்தான் டைரக்டர்களும் எனக்கு தருகிறார்கள். இருப்பினும், சமீபத்தில் நான் தஞ்சாவூர் போயிருந்தபோது பாசமலர் சீரியலில் நான் நடித் துள்ள மல்லிகா கேரக்டரின் பெயரைச்சொல்லி அங்குள்ள நேயர்கள் என்னை அழைத்தனர். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் அவர்களை பாதித்திருக்கிறது. அதைக்கேட்க ரொம்ப சந்தோசமாக இருந்தது.


பாசமலர் ஒரு அண்ணன் ரெண்டு தங்கச்சி பற்றிய கதை. பயங்கர ரீச். எனக்கு நிஜத்தில் அண்ணன் இல்லை. அதனால் அந்த சீரியலில் நடிக்கும் ஸ்டாலின் அண்ணனை என் சொந்த அண்ணன் போன்றே நினைத்து நடித்து வருகிறேன். அவர் தேனியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். அனைவரிடமும் பாசமாக பழகுவார். அதனால் எமோஷனல் காட்சிகளில் அவருடன் நடிக்கும்போது கண்ணில் இருந்து எளிதாக கண்ணீர் வந்து விடும். அந்த வகையில் செண்டி மென்ட் காட்சிகளில் க்ளிசரின் போடாமல் தானாகவே அழுது நடிக்கிறேன்.


அதேபோல் பொன்னூஞ்சல் தொடரிலும் நல்ல வேடத்தில் நடித்துக்கொண்டி ருக்கிறேன். மகாபாரதம் தொடரில் கிருஷ்ணனின் தங்கையாக நடிக்கிறேன். பிரியசகியிலும் நடிக்கிறேன்.


ஒரே நேரத்தில் பல சீரியல்களில் எப்படி நடிக்க முடிகிறது?


மகாபாரதம், ரோமாபுரி பாண்டியனெல்லாம் மாதத்தில் 2 நாள்தான் படப்பிடிப்பு இருக்கும். காரணம், சீரியல்களைப் பொறுத்தவரை என்னோடு சைடு கதை போகும்போதுதான் நான் பிசியாக இருப்பேன். ஆனால், மற்ற சீரியல்களில்தான் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். நான் பிசியாக இருப்பதால் அதற்கேற்ப என்னிடம் சீரியல் நிறுவனங்கள் கால்சீட் வாங்கிக்கொள்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்பு இருப்பதினால்தான் இத்தனை சீரியல்களில் ஒரே நேரத்தில் நடிக்க முடிகிறது.


படப்பிடிப்பு இல்லாத நாட்களில் உங்களின் பொழுதுபோக்கு என்ன?


படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தோழிகளுடன் வெளியூர்களுக்கு செல்வேன். வீட்டில் இருக்கும்போது பெயிண்டிங் வரைவேன். தனிமையாக இருந்தால் போரடிக்கும் என்பதால் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இதுபோன்று என்னை பிசியாகவே வைத்துக்கொள்வேன். மேலும், பள்ளியில் படித்த காலத்தில் விளையாட்டுகளில் அதிக ஆர்வமாக இருந்தேன். 150-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வாங்கியிருக்கிறேன். கொக்கோ, கபடி, வாலிபால், ரன்னிங் என பல விளையாட்டுகளில் நான் ஆர்வமாக விளையாடி வின் பண்ணியிருக்கிறேன்.


நடிப்புக்காக ஏதேனும் விருது வாங்கியிருக்கிறீர்களா?


உதிரிப்பூக்கள் தொடரில் சேத்தனின் மகளாக நடித்தேன். அந்த சீரியலில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றேன். அது பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது. அதன்பிறகு இப்போது நான் நடித்து வரும் பாசமலர் தொடரில் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் ஷாமிலி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in