Advertisement

சிறப்புச்செய்திகள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சரித்திர கதைகளில் நடிப்பது புதுமையான அனுபவம்! - சாந்தி ஆனந்த்

03 மார், 2016 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Acting-in-Historical-Serial-is-New-Journal-says-ShantiAnand
Advertisement

ஆரம்ப காலத்தில் அழுது வடியும் செண்டிமென்ட் வேடங்களில் அதிகமாக நடித்து வந்த நான், இப்போது கொடூர வில்லியாக நடிக்கிறேன். செண்டிமென்ட் வேடங்களை விட இந்த வில்லி வேடங்கள்தான் எனக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளன என்கிறார் நடிகை சாந்தி ஆனந்த். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


பார்த்திபன் நடித்த சுகமான சுமைகள் படத்தில் தங்கை வேடத்தில் நான் அறிமுகமானேன். அதன்பிறகு கெளரி மனோகரி படத்தில் நாயகியாக நடித்தேன். தொடர்ந்து கோகுலம், டூயட் என் சில படங்களில் நடித்தேன். பின்னர் 1995ல் திருமணமாகி 5 வருடம் பிரேக் ஆகி விட்டது. அதன்பிறகு கே.பாலசந்தர் சார் இயக்கிய சீரியல்கள் மட்டுமின்றி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் நடித்தேன். அப்போது, அழுது வடியும் கேரக்டர்களில் அதிகமாக நடித்து வந்த நான், ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியலில் முதன்முதலாக நெகட்டீவ் ரோலில் நடித்தேன். அந்த சீரியல் எதிர்பார்க்காத ரீச்சைக் கொடுத்தது. அதுவே எனக்கு பிரேக்காக அமைந்தது. அதன்பிறகு, நான் நெகடீவ் ரோலில் நடித்த சீரியல்கள் எல்லாமே என்னை பேச வைத்தன.


தற்போது ராமானுஜர் தொடரில், ராமானுஜரின் மாமியாராக நடித்து வருகிறேன். ஒரு தாய் தனது மகளின் வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சுயநலமாக நடந்து கொள்ளும் கதாபாத்திரம். அதேப்போல் அபூர்வ ராகங்கள் தொடரில் பயங்கர வில்லியாக நடித்து வருகிறேன். போலீஸ்காரனுக்கு அம்மா, ஆனால் எனக்கு கிரிமினல் புத்தி. மகன் தூண்டி விடுவதால் அந்த மாதிரி செயல்படுவேன். என் இனிய தோழியே தொடரில் ஒரு சாப்ட் அம்மாவாக நடிக்கிறேன். ரோமாபுரி பாண்டியன் சீரியலிலும் முக்கிய ரோலில் நடிக்கிறேன்.


முன்பு, மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கிய சேரன் எக்ஸ்பிரஸ் சீரியலில் நடித்தேன். 30 எபிசோடில் 20 கதைகள். அதில் மொத்தம் 5 கேரக்டர்கள் தான். நான் தான் ஹீரோயினாக நடித்தேன். அப்போது கருணாநிதி, அந்த சீரியலை பார்த்து விட்டு எனது நடிப்பு சிறப்பாக இருந்ததாக கே.பி சாரிடம் சொல்லியிருக்கிறார். அந்தவகையில், இப்போது அதே கருணாநிதியின் கதை வசனத்தில் ஒளிபரப்பாகி வரும் ரோமாபுரி பாண்டியன் தொடரில் நடிப்பது பெருமையாக உள்ளது.


மேலும், நான் நடிப்பதில் சரித்திர கதைகளில் ஒளிபரப்பாகி வரும் ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர் சீரியல்களில் அந்த காலகட்டத்து காஸ்டியூம் அணிந்து, இலக்கிய தமிழ் பேசி நடிப்பது புதுமையான அனுபவமாக இருக்கிறது. அது மனதுக்கு திருப்தியாகவும் உள்ளது என்று கூறும் நடிகை சாந்தி ஆனந்த், சினிமாவில் நான் ஒரு காலத்தில் கதாநாயகி என்றபோதும், இப்போது சின்னச்சின்ன வேடங்கள்தான் கிடைக்கிறது. பெரிதாக சொல்லும்படியாக இல்லை. என்றாலும், கிடைக்கிற வாய்ப்புகளை விடக்கூடாதே என்பதற்காக யார் எந்த வேடத்தில் நடிக்க சொன்னாலும் நடித்து வருகிறேன். அந்த வகையில் சினிமா, சீரியல், டாகுமெண்டரி என்று எதுவாக இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டேயிருப்பேன் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in