'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் மற்றும், பெப்சி எனப்படும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு இடையே நடந்த பேச்சில், 27.5 சதவீத ஊதிய உயர்வுக்கு உடன்பாடு ஏற்பட்டது. சின்னத்திரை நாடக தயாரிப்பாளர் சங்கம் மற்றும், பெப்சி இடையே, ஊதிய உயர்வு குறித்த பேச்சு நேற்று நடந்தது. இதில், சின்னத்திரை சங்க தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலர் குஷ்பூ, பெப்சி தலைவர் சிவா உட்பட, பலர் பங்கேற்றனர்.
அதன்பின், வெளியிடப்பட்ட அறிக்கை: சின்னத்திரை மிகவும் நலிந்து வருகிறது. இதற்கு, ஊதிய உயர்வு மிகவும் அவசியம். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், 27.5 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, 10 சதவீத உயர்வு மட்டுமே அளிக்கப்பட்டது. இந்த முறை, 27.5 சதவீத உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், சின்னத்திரையை சேர்ந்த, ஏழு பிரிவில் பணியாற்றும், 5,000 தொழிலாளர்கள் பயனடைவர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -