விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' | ஹிட் 3 : முதல் நாள் வசூல் 43 கோடி |
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் மற்றும், பெப்சி எனப்படும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு இடையே நடந்த பேச்சில், 27.5 சதவீத ஊதிய உயர்வுக்கு உடன்பாடு ஏற்பட்டது. சின்னத்திரை நாடக தயாரிப்பாளர் சங்கம் மற்றும், பெப்சி இடையே, ஊதிய உயர்வு குறித்த பேச்சு நேற்று நடந்தது. இதில், சின்னத்திரை சங்க தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலர் குஷ்பூ, பெப்சி தலைவர் சிவா உட்பட, பலர் பங்கேற்றனர்.
அதன்பின், வெளியிடப்பட்ட அறிக்கை: சின்னத்திரை மிகவும் நலிந்து வருகிறது. இதற்கு, ஊதிய உயர்வு மிகவும் அவசியம். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், 27.5 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, 10 சதவீத உயர்வு மட்டுமே அளிக்கப்பட்டது. இந்த முறை, 27.5 சதவீத உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், சின்னத்திரையை சேர்ந்த, ஏழு பிரிவில் பணியாற்றும், 5,000 தொழிலாளர்கள் பயனடைவர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -