அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் மற்றும், பெப்சி எனப்படும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு இடையே நடந்த பேச்சில், 27.5 சதவீத ஊதிய உயர்வுக்கு உடன்பாடு ஏற்பட்டது. சின்னத்திரை நாடக தயாரிப்பாளர் சங்கம் மற்றும், பெப்சி இடையே, ஊதிய உயர்வு குறித்த பேச்சு நேற்று நடந்தது. இதில், சின்னத்திரை சங்க தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலர் குஷ்பூ, பெப்சி தலைவர் சிவா உட்பட, பலர் பங்கேற்றனர்.
அதன்பின், வெளியிடப்பட்ட அறிக்கை: சின்னத்திரை மிகவும் நலிந்து வருகிறது. இதற்கு, ஊதிய உயர்வு மிகவும் அவசியம். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், 27.5 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, 10 சதவீத உயர்வு மட்டுமே அளிக்கப்பட்டது. இந்த முறை, 27.5 சதவீத உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், சின்னத்திரையை சேர்ந்த, ஏழு பிரிவில் பணியாற்றும், 5,000 தொழிலாளர்கள் பயனடைவர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -