'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
தமிழில், 'சின்னப்பாப்பா பெரியபாப்பா' தொடரில் நடித்து வரும் நளினி, தெலுங்கில் அம்மன்னா கோடலா என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஒன்றரை வருடமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நடித்தமைக்காக 3 விருதுகள் பெற்றிருக்கிறாராம்.
இதுபற்றி நளினி கூறும்போது, அம்மன்னா கோடலா என்றால் தமிழில் அப்ப அப்படியா என் மருமக என்று அர்த்தம். இதில் கஞ்சத்தனமுள்ள மாமியாராக நடித்திருக்கிறேன். மாந்தோப்பு கிளியே படத்தில் சுருளிராஜன் நடித்தது போன்ற வேடம். இந்த சீரியல் அங்கு நம்பர் ஒன்னாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் லீடு ரோலில் நடித்துள்ள எனக்கு ஆந்திரா அரசு விருது, நந்தி விருது, பெஸ்ட் கிரிட்டிக்ஸ் அவார்டு என இதுவரை 3 விருதுகளை பெற்றுவிட்டேன். அதனால் தெலுங்கு சீரியல்களில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகரித்து விட்டது.
மேலும், தெலுங்கில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். இதன்காரணமாக தமிழில் மேற்கொண்டு சினிமா, சின்னத்திரை தொடர்களில் நடிக்க எனக்கு நேரமில்லை. இப்படி தெலுங்கு சினிமா, சீரியல் என இரண்டிலுமே பிசியாகி விட்டதால் ஐதராபாத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டேன். மாதத்தில் நான்கு நாட்கள் சின்னப் பாப்பா பெரிய பாப்பா சீரியலுக்காக மட்டுமே சென்னை வருகிறேன் என்கிறார் நளினி.