யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
தமிழில், 'சின்னப்பாப்பா பெரியபாப்பா' தொடரில் நடித்து வரும் நளினி, தெலுங்கில் அம்மன்னா கோடலா என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஒன்றரை வருடமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நடித்தமைக்காக 3 விருதுகள் பெற்றிருக்கிறாராம்.
இதுபற்றி நளினி கூறும்போது, அம்மன்னா கோடலா என்றால் தமிழில் அப்ப அப்படியா என் மருமக என்று அர்த்தம். இதில் கஞ்சத்தனமுள்ள மாமியாராக நடித்திருக்கிறேன். மாந்தோப்பு கிளியே படத்தில் சுருளிராஜன் நடித்தது போன்ற வேடம். இந்த சீரியல் அங்கு நம்பர் ஒன்னாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் லீடு ரோலில் நடித்துள்ள எனக்கு ஆந்திரா அரசு விருது, நந்தி விருது, பெஸ்ட் கிரிட்டிக்ஸ் அவார்டு என இதுவரை 3 விருதுகளை பெற்றுவிட்டேன். அதனால் தெலுங்கு சீரியல்களில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகரித்து விட்டது.
மேலும், தெலுங்கில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். இதன்காரணமாக தமிழில் மேற்கொண்டு சினிமா, சின்னத்திரை தொடர்களில் நடிக்க எனக்கு நேரமில்லை. இப்படி தெலுங்கு சினிமா, சீரியல் என இரண்டிலுமே பிசியாகி விட்டதால் ஐதராபாத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டேன். மாதத்தில் நான்கு நாட்கள் சின்னப் பாப்பா பெரிய பாப்பா சீரியலுக்காக மட்டுமே சென்னை வருகிறேன் என்கிறார் நளினி.