அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
வருகிற 15ந் தேதி முதல் ராஜ் டி.வியில் இந்திரா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. புகழ்பெற்ற இந்தி தொடரை தமிழில் டப் செய்து ஒளிபரப்புகிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்திரா தொடர் மற்ற தொடர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. தொடரின் நாயகியான இந்திராவிற்கு சரியாக பேச வராது. திக்குவாய் பிரச்சினை உள்ளனர். இதனால் அவருக்கு திருமணம் நடக்காது. கடைசியில் ஒருவன் திருமணம் செய்து கொள்ள முன்வருகிறான். அந்த திருமணம் வரதட்சணை பிரச்சினையால் நின்று விடுகிறது. இதனால் வாழ்க்கையில் ஜெயித்து காட்ட வேண்டும் என்று கருதும் இந்திரா, ஒரு தொலைக்காடச்சியில் தொகுப்பாளினியாக வேலைக்குச் சேர்கிறார். திக்குவாய் பிரச்சினை உள்ளவர் எப்படி தொகுப்பாளினியாக ஜெயிக்கிறார். அந்த சேனல் முதலாளியின் மகனையே திருமணம் செய்கிற அளவிற்கு எப்படி வளர்கிறார் என்பதுதான் தொடரின் கதை.