டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாசமலர் தொடரில் பாசக்கார தங்கையாக நடித்து வருபவர் ஷாம்லி. இவர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள ஓம் சாந்தி ஓம் படத்திலும் நடித்துள்ளார். இதுதவிர மேலும் சில படவாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளதாம். ஆனால், சின்னத்திரையிலேயே பிசியாக இருப்பதால் சினிமாவை அவரால் ஏற்க முடியவில்லையாம்.
இதுகுறித்து ஷாம்லி மேலும் கூறும்போது, நான் சின்னத்திரையில் என்ட்ரி ஆனதில் இருந்தே பிசியாகத்தான் இருக்கிறேன். அப்போது சில தொடர்களில் எனது நடிப்பைப்பார்த்து விட்டு சினிமாவில் நடிக்க அழைப்பார்கள். ஆனால் அவர்கள் கால்சீட் கேட்கும் நேரத்தில் நான் சீரியல்களில் பிசியாக இருப்பேன். அப்படி பல சினிமா வாயப்புகள் நழுவிப்போய் உள்ளன. அதில் நடித்த ஒரு படம் ஓம் சாந்தி ஓம்.
மேலும், சினிமாவில் நடிக்க அழைப்பவர்கள் நடிக்க தெரியுமா? என்று கேட்பதை விட கிளாமராக நடிப்பீர்களா? என்றுதான் முதலில் கேட்கிறார்கள். அதுவே எனக்கு பிடிக்கவில்லை. அதோடு சீரியல்களில் நடித்து நல்லதொரு இமேஜ் உள்ளது. அதை சினிமாவில் நடித்து கெடுத்துக்கொள்ள வேண்டுமா? என்றும் நினைக்கிறேன். அதனால் சில படங்களில் கதாநாயகியாக நடிக்க கேட்டபோதுகூட, எனக்கு ஏதாவது நல்ல கேரக்டர் இருந்தால் கொடுங்கள் என்கிறேன். ஆனால் அப்படி நான் கேட்டதும் போய் விடுபவர்கள் திரும்பி வருவதில்லை என்று கூறும் ஷாம்லி, என்னைக்கேட்டால் சீரியல்களில் நடிப்பதுதான் பிடித்திருக்கிறது. திருப்தியாகவும் உள்ளது. அதனால், எதிர்காலத்தில் டைட்டில் வேடங்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார்.