பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
இசைஞானி இளைராஜா தாரை தப்பட்டை படம் வரை ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனை 999வது படமான ஷமிதாப் இந்திப் படத்தின் இயக்குனர் பால்கி மும்பையில் கொண்டாடினார். அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் பாலா, இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்து திட்டமிட்டார். அந்த நேரத்தில் சென்னையில் பேய் மழை, பெருவெள்ளம் வந்ததால் நடத்த முடியவில்லை. இப்போது இளையராஜா மியூசிக் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் டி.வி பிரமாண்டாக நடத்துகிறது. வருகிற 27ந் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் இது நடக்கிறது.
இதுகுறித்து விஜய் டி.வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இசையால் அனைவரையும் நெகிழச் செய்தவருக்கு இந்த விழா ஒரு சமர்ப்பணம். மக்கள் வியந்து ரசித்த இளையராஜாவின் இனிமையான பாடல்கள் அந்த பிரமாண்ட மேடையில் இளையராஜாவிற்கு காணிக்கையாக சமர்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகமும் பங்கேற்று இசைஞானிக்கு கவுரம் சேர்க்க இருக்கிறது. கலையுலம் கண்டிராத பெருவிழாவாக இது இருக்கும். என்கிறது விஜய் டி.வி.