நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
புதுயுகம் சேனலில் வருகிற 8ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் பட்டுச்சேலை. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. மாமியார் மருமகள் சண்டை, கணவனின் மனைவி சின்ன வீடு சண்டைகளிலிருந்து விலகி வித்தியாசமான காதல் கதையாக ஒளிபரப்பாகிறது பட்டுச்சேலை.
மிகப்பெரிய பட்டுச் சேலை கடை வைத்திருப்பவர் காஞ்சனா. தன் கடைக்கு போட்டியாக யார் கடை போட்டாலும் அவர்களை விரட்டி விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார். அந்த அளவிற்கு கொடூரமானவர். அவரிடம் தவனைக்கு சேலை வாங்கி கிராமத்து மக்களுக்கு கடனுக்கு விற்பவர் தாமரை. வீரமான, நியாயமான பொண்ணு, மற்றவர்களுக்காக போராடுகிற பெண். காஞ்சனாவின் கடைக்கு அடிக்கடி வரும் தாமரைக்கும், காஞ்சனாவின் மகன் அஜய்க்கும் காதல் மலர்கிறது. எதிரில் கடை போட்டாலே ஆளை அழித்து விடும் காஞ்சனா, கோடீஸ்வரியான தன் மகனை சேலை விற்கும் பெண் காதலித்தார் விடுவாரா.?. காஞ்சனா, தாமரையின் மோதல்தான் கதை. இவர்களின் மோதலை மக்கள் எதுவரை ரசிக்கிறார்களோ அதுவரை சீரியல் தொடரும். இதுவரை அன்பான அம்மா கேரக்டரில் நடித்து வந்த மீனா குமாரி இதில் வில்லி காஞ்சனாவாக நடிக்கிறார்.