ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் |

பாரதிராஜா இயக்கிய 'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கிய 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து அமீர் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த 'பருத்தி வீரன்' படம் மூலம் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்றார். திறமையான நடிகையாக இருந்தாலும் அடுத்து அவர் நடித்து வெளிவந்த 'மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன்' ஆகிய படங்களின் தோல்வியால் அவரால் தமிழில் முன்னணிக்கு வர முடியவில்லை. இருந்தாலும், மலையாளம், கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துக் கொண்டுதானிருந்தார்.
2012ல் வெளிவந்த 'சாருலதா' படம்தான் தமிழில் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். கடந்த நான்கு வருடங்களாக தமிழில் அவர் நடித்து எந்தப் படமும் வெளிவரவில்லை. இதனிடையே மலையாளத் தொலைக்காட்சியில் 'டி ஃபார் டான்ஸ்' என்ற நிகழ்ச்சியிலும், கன்னடத் தொலைக்காட்சியில் 'டான்சிங் ஸ்டார்' என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தார்.
தற்போது தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வரும் 30ம் தேதி ஒளிபரப்பாக உள்ள 'கிங் ஆப் டான்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள உள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் பிரியா மணி நடுவராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. டிவிக்கு வந்தவர் சீக்கிரமே ஒரு தமிழ்ப் படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.