டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' |
பாரதிராஜா இயக்கிய 'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கிய 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து அமீர் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த 'பருத்தி வீரன்' படம் மூலம் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்றார். திறமையான நடிகையாக இருந்தாலும் அடுத்து அவர் நடித்து வெளிவந்த 'மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன்' ஆகிய படங்களின் தோல்வியால் அவரால் தமிழில் முன்னணிக்கு வர முடியவில்லை. இருந்தாலும், மலையாளம், கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துக் கொண்டுதானிருந்தார்.
2012ல் வெளிவந்த 'சாருலதா' படம்தான் தமிழில் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். கடந்த நான்கு வருடங்களாக தமிழில் அவர் நடித்து எந்தப் படமும் வெளிவரவில்லை. இதனிடையே மலையாளத் தொலைக்காட்சியில் 'டி ஃபார் டான்ஸ்' என்ற நிகழ்ச்சியிலும், கன்னடத் தொலைக்காட்சியில் 'டான்சிங் ஸ்டார்' என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தார்.
தற்போது தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வரும் 30ம் தேதி ஒளிபரப்பாக உள்ள 'கிங் ஆப் டான்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள உள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் பிரியா மணி நடுவராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. டிவிக்கு வந்தவர் சீக்கிரமே ஒரு தமிழ்ப் படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.