நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பாரதிராஜா இயக்கிய 'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கிய 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து அமீர் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த 'பருத்தி வீரன்' படம் மூலம் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்றார். திறமையான நடிகையாக இருந்தாலும் அடுத்து அவர் நடித்து வெளிவந்த 'மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன்' ஆகிய படங்களின் தோல்வியால் அவரால் தமிழில் முன்னணிக்கு வர முடியவில்லை. இருந்தாலும், மலையாளம், கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துக் கொண்டுதானிருந்தார்.
2012ல் வெளிவந்த 'சாருலதா' படம்தான் தமிழில் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். கடந்த நான்கு வருடங்களாக தமிழில் அவர் நடித்து எந்தப் படமும் வெளிவரவில்லை. இதனிடையே மலையாளத் தொலைக்காட்சியில் 'டி ஃபார் டான்ஸ்' என்ற நிகழ்ச்சியிலும், கன்னடத் தொலைக்காட்சியில் 'டான்சிங் ஸ்டார்' என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தார்.
தற்போது தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வரும் 30ம் தேதி ஒளிபரப்பாக உள்ள 'கிங் ஆப் டான்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள உள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் பிரியா மணி நடுவராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. டிவிக்கு வந்தவர் சீக்கிரமே ஒரு தமிழ்ப் படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.