ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் |
பாரதிராஜா இயக்கிய 'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கிய 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து அமீர் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த 'பருத்தி வீரன்' படம் மூலம் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்றார். திறமையான நடிகையாக இருந்தாலும் அடுத்து அவர் நடித்து வெளிவந்த 'மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன்' ஆகிய படங்களின் தோல்வியால் அவரால் தமிழில் முன்னணிக்கு வர முடியவில்லை. இருந்தாலும், மலையாளம், கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துக் கொண்டுதானிருந்தார்.
2012ல் வெளிவந்த 'சாருலதா' படம்தான் தமிழில் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். கடந்த நான்கு வருடங்களாக தமிழில் அவர் நடித்து எந்தப் படமும் வெளிவரவில்லை. இதனிடையே மலையாளத் தொலைக்காட்சியில் 'டி ஃபார் டான்ஸ்' என்ற நிகழ்ச்சியிலும், கன்னடத் தொலைக்காட்சியில் 'டான்சிங் ஸ்டார்' என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தார்.
தற்போது தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வரும் 30ம் தேதி ஒளிபரப்பாக உள்ள 'கிங் ஆப் டான்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள உள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் பிரியா மணி நடுவராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. டிவிக்கு வந்தவர் சீக்கிரமே ஒரு தமிழ்ப் படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.