பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் |

ஏழாம் உயிர் தொடரில் நடித்து வருகிறார் லட்சுமி விஸ்வநாத். மலையாளத்தில் நில விளக்கு தொடரிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். நடித்துக் கொண்டே பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகளை முடித்தார். பி.ஏ முடித்துள்ள அவர் தற்போது ஏம்.ஏ படிக்க இருக்கிறார். இது தினசரி கல்லூரிக்கு சென்றாக வேண்டிய படிப்பு.
எம்.ஏ படித்து முடித்து விட்டு ஒரு கல்லூரியில் பேராசிரியையாக சேவை செய்ய வேண்டும் என்பே லட்சுமியின் விருப்பம். இதற்காக இந்த இரண்டு சீரியல்களுடன் நடிப்புக்கு குட்பை சொல்ல இருக்கிறார். வருகிற ஜூலை மாதம் கல்லூரிகள் திறந்ததும் கல்லூரிக்கு செல்ல இருக்கிறார். அதற்குள் இந்த இரண்டு தொடர்களும் முடிந்து விடும் என்று நம்புகிறார். சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வராமல் நேரடியாக சின்னத்திரைக்கு வருகிறவர்கள் ஒரு சில சீரியல்களில் நடித்து விட்டு விலகுவது நீண்ட காலமாக நடந்து வருகிற ஒன்று. அந்த வரிசையில் லட்சுமி விஸ்வநாத்தும் இணைந்திருக்கிறார்.