அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
இசைஞானி இளையராஜா எப்போதுமே தனி பேட்டிகளுக்கு உடன்படுவதில்லை. அதுவும் குறிப்பாக தொலைக்காட்சிகளுக்கு தனித்து பேட்டி தருவது அபூர்வமானது. ஆனால் இளையராஜாவின் நடவடிக்கைகளில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மீடியாக்களை அடிக்கடி சந்திக்கிறார், பேட்டி கொடுக்கிறார். சில கேள்விகளுக்கு கோபப்பட்டாலும் பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்கிறார். வெள்ள பாதிப்பின்போது நேரடியாக சென்று உதவுகிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதன் அடுத்த கட்டமாக விஜய் டி.வியில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடத்தும் காப்பி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்றிறருக்கிறார். அவரது 1000மாவது படமாக தாரை தப்பட்டை வெளிவருவதையொட்டி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேட்டியளித்துள்ளார். சினிமா, இசை, ஆன்மீகம், பொது பிரச்சினைகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி உள்ளார். வருகிற பொங்கல் அன்று இந்த பேட்டி ஒளிபரப்பாகிறது.