லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா |

இசைஞானி இளையராஜா எப்போதுமே தனி பேட்டிகளுக்கு உடன்படுவதில்லை. அதுவும் குறிப்பாக தொலைக்காட்சிகளுக்கு தனித்து பேட்டி தருவது அபூர்வமானது. ஆனால் இளையராஜாவின் நடவடிக்கைகளில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மீடியாக்களை அடிக்கடி சந்திக்கிறார், பேட்டி கொடுக்கிறார். சில கேள்விகளுக்கு கோபப்பட்டாலும் பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்கிறார். வெள்ள பாதிப்பின்போது நேரடியாக சென்று உதவுகிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதன் அடுத்த கட்டமாக விஜய் டி.வியில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடத்தும் காப்பி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்றிறருக்கிறார். அவரது 1000மாவது படமாக தாரை தப்பட்டை வெளிவருவதையொட்டி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேட்டியளித்துள்ளார். சினிமா, இசை, ஆன்மீகம், பொது பிரச்சினைகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி உள்ளார். வருகிற பொங்கல் அன்று இந்த பேட்டி ஒளிபரப்பாகிறது.




