நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இசைஞானி இளையராஜா எப்போதுமே தனி பேட்டிகளுக்கு உடன்படுவதில்லை. அதுவும் குறிப்பாக தொலைக்காட்சிகளுக்கு தனித்து பேட்டி தருவது அபூர்வமானது. ஆனால் இளையராஜாவின் நடவடிக்கைகளில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மீடியாக்களை அடிக்கடி சந்திக்கிறார், பேட்டி கொடுக்கிறார். சில கேள்விகளுக்கு கோபப்பட்டாலும் பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்கிறார். வெள்ள பாதிப்பின்போது நேரடியாக சென்று உதவுகிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதன் அடுத்த கட்டமாக விஜய் டி.வியில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடத்தும் காப்பி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்றிறருக்கிறார். அவரது 1000மாவது படமாக தாரை தப்பட்டை வெளிவருவதையொட்டி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேட்டியளித்துள்ளார். சினிமா, இசை, ஆன்மீகம், பொது பிரச்சினைகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி உள்ளார். வருகிற பொங்கல் அன்று இந்த பேட்டி ஒளிபரப்பாகிறது.