பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இசைஞானி இளையராஜா எப்போதுமே தனி பேட்டிகளுக்கு உடன்படுவதில்லை. அதுவும் குறிப்பாக தொலைக்காட்சிகளுக்கு தனித்து பேட்டி தருவது அபூர்வமானது. ஆனால் இளையராஜாவின் நடவடிக்கைகளில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மீடியாக்களை அடிக்கடி சந்திக்கிறார், பேட்டி கொடுக்கிறார். சில கேள்விகளுக்கு கோபப்பட்டாலும் பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்கிறார். வெள்ள பாதிப்பின்போது நேரடியாக சென்று உதவுகிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதன் அடுத்த கட்டமாக விஜய் டி.வியில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடத்தும் காப்பி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்றிறருக்கிறார். அவரது 1000மாவது படமாக தாரை தப்பட்டை வெளிவருவதையொட்டி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேட்டியளித்துள்ளார். சினிமா, இசை, ஆன்மீகம், பொது பிரச்சினைகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி உள்ளார். வருகிற பொங்கல் அன்று இந்த பேட்டி ஒளிபரப்பாகிறது.