மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? | பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' விரைவில் ஆரம்பம் | சர்வதேசப் படமாகவே இருக்கும் : அல்லு அர்ஜுன் தந்த அப்டேட் | விஜே சித்துவின் டயங்கரம் | ஒவ்வொரு இந்தியன் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் ; நடிகர் சோனு சூட் வேதனை | புகை பிடித்தல் மற்றும் மதுவுக்கு எதிரான வாசகங்கள் படம் பார்க்கும் மூடை கெடுக்கிறது : அனுராக் காஷ்யப் | வசூல் சண்டையை ஆரம்பித்த 'ஹிட் 3' : பதிலடி கொடுத்த 'ரெட்ரோ' | சிம்பு, சந்தானம் இணையும் படம் நாளை படப்பூஜை | டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? |
கேரளாவைச் சேர்ந்தவர் கல்யாணி, அம்மா டான்சர். அப்பா கப்பல் கேப்டன். சினிமாவில் பூர்ணிதா என்ற பெயரில் அறிமுகமானா£ர். சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் ஹீரோயினியாக ஜெயிக்க முடியவில்லை. இதனால் கல்யாணி என்ற தனது இயற்பெயரிலேயே சின்னத்திரையில் நடிக்க வந்தார். அண்ணாலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், தொடர்களில் நடித்தார். பீச் கேர்ள் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். தற்போது ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து வருகிறார். இது 350 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் வாழ்ந்த அவர்கள் கடந்த மாதம் பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார்கள். அங்கிருந்து வந்து ஆண்டாள் அழகர் தொடரில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் கணவருடன் இணைந்து சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார். கன்னட தொடர்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் கல்யாணி.