ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏராளமான இளவட்ட பாடகர் பாடகிகள் கலந்து கொண்டு தங்களது இசையாற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர். பல சுற்றுக்கள் நடத்தி இறுதியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மிகப்பெரிய அளவில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் என்று அவர்கள் சொல்லிக்கொண்டபோதும், இந்த நிகழ்ச்சியில் தமிழ் அல்லாத வேற்று மொழி பாடகர்கள்தான் அதிகமாக பாடி வருகின்றனர்.
இதுபற்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களில் ஒருவரான மா.கா.பா.ஆனந்த் கூறுகையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமாகியுள்ளது. நான்கு சுவருக்குள் பாடிக்கொண்டிருந்த பாடகர்களை உலகறிய வைக்கும் நிகழ்ச்சியாகியிருக்கிறது. இதனால் பல பாத்ரூம் பாடகர்கள் பாப்புலராகி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் என்று நாங்கள் கேப்சன் சொல்கிறோம். ஆனால் இதில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலம், உலக நாடுகளில் இருந்தும் பாடகர்கள் வந்து பாடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழர்களை விட மற்ற மொழியினர்தான் அதிகமாக பங்களித்து வருகின்றனர்.
என்னைக்கேட்டால், தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள பாடகர் - பாடகிகளும் இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும். இருட்டில் கிடக்கும் தங்களது திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும். தமிழ் மக்களுக்காக நடத்தப்படும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தமிழர்களே வெற்றிவாகை சூட வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் மா.கா.பா.ஆனந்த்.