ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடரில் முதல் பாகத்தில் மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா நடித்தனர். அவர்களுடன் அப்பா-அம்மாவாக டைரக்டர் ராஜசேகர்-குயிலியும் நடித்தனர். அப்போது காதலர்களாக நடித்த செந்தில்-ஸ்ரீஜா இருவருக்குமிடையே நிஜத்திலும் காதல் ஏற்பட்டு, பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து மிர்ச்சி செந்தில் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து வரும் நிலையில் ஸ்ரீஜா இல்லத்தரசியாகி விட்டார்.அதையடுத்து, சரவணன் மீனாட்சி தொடரின் சீசன்-2வில் பின்னர் கவின்-ரஷிதா இருவரும் நடித்து வருகின்றனர். முன்பு அப்பா-அம்மாவாக நடித்த டைரக்டர் ராஜசேகர்-குயிலி இருவரும் சீசன்-2வில் தாத்தா பாட்டியாகி விட்டனர்.
மேலும், சீசன் -2வில் நாயகியாக நடித்து வரும் ரஷிதா, தனது துடுக்குத்தனமான நடிப்பினால் சின்னத்திரை நேயர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அதேபோல் சினிமாத்துறையினரையும் அவரது நடிப்பு கவர்ந்ததால், உப்புக்கருவாடு படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரஷிதா. அதோடு, சின்னத்திரையை விடவும் பெரிய திரையில் இன்னும் பலபடி உயர்ந்து சிறப்பான பர்பாமென்ஸ் கொடுத்துள்ள ரஷிதா, தொடர்ந்து குடும்பப் பாங்கான வேடங்கள் கிடைத்தால் சின்னத்திரையை போலவே சினிமாவையும் தொடரப்போகிறாராம்.