பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நீயா நானா என்ற ஒரே நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். அவரது மடை திறந்த பேச்சும், ஆழமான கருத்துக்களும்,அவர் அணியும் கோட்டும், படியில் உட்காரும் ஸ்டைலும் மிகவும் பிரபலம். இரண்டு முறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதுகளை பெற்றிருக்கிறார்.
அவரை இயக்குனர் சமுத்திரக்கனி நிமிர்ந்து நில் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார். அதில் அவர் தொலைக்காட்சி செய்தியாளராகவே நடித்தார். அதில் கோபிநாத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது. அன்று முதல் சினிமாவில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் அவரை அடிக்கடி பார்க்க முடிந்தது.
தற்போது ஜீவா, நயன்தாரா நடித்துள்ள திருநாள் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அசிஸ்டெண்ட் கமிஷனர் புகழேந்தியாக நடித்துள்ளார். தஞ்சை, கும்பகோணம் பகுதியில் செயல்பட்டு வரும் உள்ளூர் தாதாக்களை அடக்க வரும் டெரர் போலீஸ் அதிகாரி.- இந்த படத்திற்கு பிறகு தனக்கு சினிமா வாய்ப்புகள் பெருகும் என்று நம்புகிறார் கோபிநாத். அதானல் சினிமாவுக்கு தொடர்ந்து முக்கியத்தும் கொடுத்து வருகிறார்.