ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மோகன் நடித்த பிரபலமான படம் மெல்ல திறந்தது கதவு. அந்த படத்தின் பெயரில் ஜீ தமிழ் சேனல் புதிய தொடர் ஒன்றை கடந்த 2ம் தேதி முதல் ஒளிபரப்புகிறது. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.
சீரியல்களின் வரலாற்றில் இந்த தொடர் ஒரு முக்கியமானதாக இருக்கும். காரணம் முழுக்க முழுக்க காதல் கதை என்பதோடு. பார்வைதிறன் இல்லாத சந்தோஷ், செல்வி என்ற இரண்டு இளம் ஜோடிகளின் காதல் கதை. இதில் சந்தோஷ் கோடீஸ்வர வீட்டு மகன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி அதை விட அவன் நேசிப்பது செல்வியை. செல்வி சாதாரண குடும்பத்து பெண். சந்தோஷ் கோடீஸ்வரன் என்பது தெரியாமலேயே காதலிப்பவள். இந்த காதலர்களுக்கு வரும் பிரச்னையும், அதன் தீர்வுகளும்தான் கதை.
புதுமுகங்கள் நடிக்கிறார்கள். என்.கண்ணன் இசை அமைக்கிறார். வி.சங்கர்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார், திவ்யா விஷ்வநாதன் தயாரிக்கிறார், பிரம்மா ஜி.தேவ் இயக்குகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியிருக்கிறது மெல்ல திறந்தது கதவு.