இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

ஒருகாலத்தில் தனது கவர்ச்சி ஆட்டத்தால் கலக்கியவர் ஜோதிலட்சுமி. 300 படங்களுக்கு மேல் ஆடியுள்ளார். 50 படங்களுக்குமேல் ஹீரோயினாக நடித்துள்ளார். வயதாகிவிட்டதால் ஆடுவதை குறைத்து நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
பல வருடங்களுக்கு முன்பு சரிகம நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பிய வேலன் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இப்போது அதே சரிகம நிறுவனம் தயாரிக்கும் வள்ளி தொடரில் நடிக்க வந்திருக்கிறார். மர்மமான பின்னணி கொண்ட டெரர் பாட்டியாக நடிக்கிறார்.
"நடிப்பை விட்டு நான் எப்போதுமே விலகியதில்லை. சில நாள் ஓய்வெடுக்கலாம் என்று தோன்றியது. அதனால் சின்ன பிரேக் எடுத்துக் கொண்டேன். வள்ளியில் நல்ல கேரக்டர் கிடைத்தது. சரிகம முக்கியமான நல்ல நிறுவனம் அதுதான் மீண்டும் வந்துவிட்டேன். மக்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் உண்மையான சந்தோஷம். அதை விட முடியுமா" என்கிறார் ஜோதிலட்சுமி.