75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? |

அழகி, சொந்தம் பந்தம், ரெட்டை வால் குருவி என பல தொடர்களில் அதிரடியான வேடங்களில் நடித்தவர் கரோலின். இதில் அழகி தொடரில் நடித்தபோது தமிழ்நாட்டு பெண்களின் அதிகப்படியான வெறுப்புக்கு ஆளானார். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் அவரை அதிரடியான வில்லியாக சித்தரித்து விட்டது. தற்போது அபூர்வ ராகங்கள் என்ற தொடரிலும மீனா என்கிற வில்லி வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் கரோலின்.
அவரிடத்தில் எல்லா தொடர்களிலுமே வில்லியாகவே நடிப்பது ஏன். இதை நீங்களாகவே விரும்பி நடிக்கிறீர்களா? இல்லை உங்களை தேடி வருவதே அந்த மாதிரி வேடங்கள்தானா? என்று கேட்டபோது, என்னைப்பொறுத்தவரை எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன். ஆனால் என்ன காரணமோ, முதலில் நான் வில்லி வேடத்தில் நடித்தே பிரபலமானதால், எல்லோருமே என்னை வில்லியாகவே பார்க்கத் தொடங்கி விட்டனர்.
அவர்களிடத்தில், பாசிட்டிவான வேடம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டால், இந்த ஸ்கிரிப்ட்டை பண்ணும்போதே வில்லி கதாபாத்திரத்திற்குள் நீங்கள் வந்து உட்கார்ந்து கொண்டீர்கள். அதனால் இந்த வேடம்தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறி விடுகிறார்கள். டைரக்டர்களே அப்படி சொல்லும்போது நான் என்ன செய்ய முடியும். அதனால் எனக்கு கிடைக்கிற வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அபூர்வ ராகங்கள் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, வில்லி வேடம் இருக்காது என்றுதான் நினைத்தேன்.