ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தொலைக்காட்சி நிறுவனம் தூர்தர்ஷன். தற்போது இது பொதிகை டி.வி. இந்த சேனல் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, இதன் 40வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு கவர்னர் ரோசைய்யா பொதிகை டி.விக்கு புகழாரம் சூட்டினார்.
அவர் பேசியதாது: இன்றைய விஞ்ஞான உலகத்தில் தொலைக்காட்சிகள் மக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்றுள்ளன. நமது இந்திய நாட்டில் ஆயிரத்து 148 சேனல்கள் உள்ளது. இதில் தூர்தர்ஷின் பங்கு மகத்தானது. சென்னை தொலைக்காட்சி தென்னகத்தில் தொடங்கப்பட்ட முதல் தொலைக்காட்சி. நமது பெருமைமிகு பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உணர்ந்து தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பொதிகை தொலைக்காட்சி முதன்மையான இடத்தில் இருக்கிறது. இவ்வாறு கவர்னர் பேசினார்.
விழாவில் பிரசார் பாரதி தலைவர் டாக்டர் சூர்ய பிரகாஷ், இயக்குனர் கே.பாக்யராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.