14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜகீதம் நிகழ்ச்சியின் 6ம் பாகத்தின் இறுதி போட்டிகள், அண்மையில் சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. இதில் இறுதி சுற்றில் 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டு பாடினார்கள். அவர்களில் மூன்று பேர் மூன்று பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. பழம்பெரும் பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அதே மேடையில ராஜ் தொலைக்காட்சி ஆண்டுதோறும் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதல்வன் விருது வழங்கும் விழாவும் நடந்தது. இந்த இரு நிகழ்ச்சிகளும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாக இருக்கிறது. காலை 11 மணிக்கு முதல்வன் விருது வழங்கும் விழாவும் மாலை 5 மணிக்கு ராஜகீதம் இறுதி போட்டியும் ஒளிபரப்பாகிறது.