இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
விஜய் தொலைக்காட்சி, விஜய் சித்திரம் என்ற நிகழ்ச்சியை நாளை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3 மணிக்கு இது ஒளிபரப்பாகும். பிரபல எழுத்தாளர்களின் சிறுகதை அல்லது நாவலை ஒரு திரைப்படத்தின் தரத்தில் படம்பிடித்து இரண்டு மணிநேர திரைப்படமாகவே ஒளிபரப்புகிறார்கள். நாளை முதல் அடுத்த 7 வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கும் கதைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அது வருமாறு:
1.பாயம்மா: மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒரு முஸ்லிம் பெண், தன் மகள் இன்னொரு மதத்தவரை காதலித்து அவரைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கும்போது அவர் என்ன செய்கிறார் என்கிற கதை.
2. இரண்டாம் ஆதாம்: ஒரு நடுத்தர வயது பெண் தனது கணவரையும் இந்த சமூகத்தையும் எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற கதை.
3. மாரி: அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ஒரு இளம் பெண் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கிறாள் என்கிற கதை.
4. தவளைக் கண்ணன்: பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருப்பவர்களில் ஒருவன் அரசியல்வாதியாகிறான். இன்னொருவன் அவனது செயலாளர் ஆகிறான். அதன் பிறகு அவர்கள் நட்பு எப்படி இருக்கிறது என்கிற கதை.
5. கணேஷ் வசந்த்: எழுத்தாளர் சுஜாதாவின் கதை மாந்தர்களான கணேசும், வசந்தும் ஒரு முக்கிய வழக்கில் எப்படி துப்பறிகிறார்கள் என்கிற கதை.
6. அந்த ஒரு நிமிடம்: இதுவும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை.
7. பஞ்சாபகேசன் தேவசகாயம்: ஊட்டியில் உள்ள காப்பி எஸ்டேட்டில் நடக்கும் ஒரு கொலையை துப்பறியும் கதை.