டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராதிகா நடித்த அண்ணாமலை, சித்தி தொடர்களை இயக்கிய சி.ஜே.பாஸ்கர், அதையடுத்து மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்ரி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார். வம்சம் தொடரை முதலில் இயக்கினார். பின்னர் கதை விசயத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகினார். அதையடுத்து, இனிமேல் சீரியலே இயக்கப்போவதில்லை என்றும் கூறி வந்தார். ஆனால் இப்போது மறுபடியும் அவர் சீரியல் பக்கம் வந்து விட்டார். தற்போது ஆதிரா என்ற தொடரை இயக்கி வருகிறார். சீரியல்கள் வழக்கம்போல் அதாவது அடுத்தவர்களின் குடும்பத்தை கெடுக்கும் கதைக்களத்தில் இருந்து மாறி புதிய பாணிக்கு வர வேண்டும் என்று கூறி வந்த சி.ஜே.பாஸ்கர், இந்த ஆதிரா சீரியலை, த்ரில்லர், ஹாரர் கதையில் இயக்கி வருகிறார். மேலும், பெரும்பாலும் மெகா சீரியல் குழுவினர் சென்னையை விட்டே வெளியேற தயங்கி வரும் நிலையில், இவரோ, ஆதிரா சீரியலை கேரளா சென்று படமாக்கி வருகிறார். ஹாரர் கதை என்பதால் அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வரும் சி.ஜே.பாஸ்கர், சினிமாவுக்கு இணையாக இந்த சீரியலின் காட்சிகளிலும், லொகேசன்களிலும் தனி கவனம் செலுத்தி வருகிறாராம்.