அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
ராதிகா நடித்த அண்ணாமலை, சித்தி தொடர்களை இயக்கிய சி.ஜே.பாஸ்கர், அதையடுத்து மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்ரி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார். வம்சம் தொடரை முதலில் இயக்கினார். பின்னர் கதை விசயத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகினார். அதையடுத்து, இனிமேல் சீரியலே இயக்கப்போவதில்லை என்றும் கூறி வந்தார். ஆனால் இப்போது மறுபடியும் அவர் சீரியல் பக்கம் வந்து விட்டார். தற்போது ஆதிரா என்ற தொடரை இயக்கி வருகிறார். சீரியல்கள் வழக்கம்போல் அதாவது அடுத்தவர்களின் குடும்பத்தை கெடுக்கும் கதைக்களத்தில் இருந்து மாறி புதிய பாணிக்கு வர வேண்டும் என்று கூறி வந்த சி.ஜே.பாஸ்கர், இந்த ஆதிரா சீரியலை, த்ரில்லர், ஹாரர் கதையில் இயக்கி வருகிறார். மேலும், பெரும்பாலும் மெகா சீரியல் குழுவினர் சென்னையை விட்டே வெளியேற தயங்கி வரும் நிலையில், இவரோ, ஆதிரா சீரியலை கேரளா சென்று படமாக்கி வருகிறார். ஹாரர் கதை என்பதால் அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வரும் சி.ஜே.பாஸ்கர், சினிமாவுக்கு இணையாக இந்த சீரியலின் காட்சிகளிலும், லொகேசன்களிலும் தனி கவனம் செலுத்தி வருகிறாராம்.