ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராகக் கலந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிப்படுத்தி அந்த நிகழ்ச்சியின் வின்னராகவும் வெற்றி பெற்றார். அதன் பின் 'அது இது எது' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பணியை ஏற்று அவருடைய தனித் திறமையின் மூலம் அந்த நிகழ்ச்சியைப் பற்றி அதிகமாகவே பேச வைத்தார்.
அடுத்து '3' படத்தில் ஒரு நண்பர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, 'மெரினா' படத்தில் நாயகனாக உயர்ந்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மாபெரும் வெற்றியாலும், தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்ததாலும் இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவருடைய 'ரஜினி முருகன்' மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் விரைவில் வெளிவர உள்ளது.
தன்னை அறிமுகப்படுத்தியவர்களையும், வளர்த்து விட்டவர்களையும் மறக்கும் இந்தத் திரையுலகத்தில் தன்னை அறிமுகப்படுத்திய, வளர்த்து விட்ட விஜய் டிவியை மறக்காமல் அவர்களுக்காக ஒரு புதிய விஷயத்தை செய்து கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் நாளை முதல் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி புதுப் பொலிவுடன் ஆரம்பமாக உள்ளது. தான் அறிமுகமான அந்த நிகழ்ச்சியை இப்போது பிரபலப்படுத்த அந்த நிகழ்ச்சியின் புரோமோவில் நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.