தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
பாசமலர் தொடரில் நடித்து வந்தவர் லட்சுமி விஸ்வநாத். அவரது நடிப்பும் கேரக்டரும் பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று அதிலிருந்து விலகி மலையாள சீரியலுக்கு சென்று விட்டார். இங்கு ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் மலையாள ரீமேக்கான நில விளக்கு தொடரில் நடித்தார்.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு 7ம் உயிர் தொடரில் நடிக்க வந்திருக்கிறார். இதிலும் அவருக்கு முக்கிய கேரக்டர். "பாசமலர் தொடரில் இருந்து ஏன் விலகினேன் என்பது இப்போது தேவையில்லாதது. மலையாளத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறேன். இயக்குனர் அழகர், 7ம் உயிர் திகில் தொடர் அதில் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அழைத்ததால் மீண்டும் வந்திருக்கிறேன். மீண்டும் தமிழில் கவனம் செலுத்த இருக்கிறேன். இதற்காக தமிழ் கற்று வருகிறேன். கேரளாவில் பட்டப்படிப்பும் படித்து வருகிறேன். படித்துக் கொண்டே நடிக்க முடிவு செய்திருக்கிறேன். திகில் தொடரில் நடிப்பதால் இரவில் தூங்கும்போது பயமாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு 7ம் உயிரில் காட்சி அமைப்புகள் இருக்கிறது" என்கிறார் லட்சுமி விஸ்வநாத்.