பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
பாசமலர் தொடரில் நடித்து வந்தவர் லட்சுமி விஸ்வநாத். அவரது நடிப்பும் கேரக்டரும் பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று அதிலிருந்து விலகி மலையாள சீரியலுக்கு சென்று விட்டார். இங்கு ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் மலையாள ரீமேக்கான நில விளக்கு தொடரில் நடித்தார்.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு 7ம் உயிர் தொடரில் நடிக்க வந்திருக்கிறார். இதிலும் அவருக்கு முக்கிய கேரக்டர். "பாசமலர் தொடரில் இருந்து ஏன் விலகினேன் என்பது இப்போது தேவையில்லாதது. மலையாளத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறேன். இயக்குனர் அழகர், 7ம் உயிர் திகில் தொடர் அதில் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அழைத்ததால் மீண்டும் வந்திருக்கிறேன். மீண்டும் தமிழில் கவனம் செலுத்த இருக்கிறேன். இதற்காக தமிழ் கற்று வருகிறேன். கேரளாவில் பட்டப்படிப்பும் படித்து வருகிறேன். படித்துக் கொண்டே நடிக்க முடிவு செய்திருக்கிறேன். திகில் தொடரில் நடிப்பதால் இரவில் தூங்கும்போது பயமாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு 7ம் உயிரில் காட்சி அமைப்புகள் இருக்கிறது" என்கிறார் லட்சுமி விஸ்வநாத்.