மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
சின்னத்திரை டிவி தொடர்களில் முக்கியத்துவம் வாய்ந்த குணசித்ர வேடங்களில் நடித்து வருபவர் கணேஷ். இவர், சொர்க்கம், நிம்மதி , பாசம், வைராக்கியம், கால பைரவர், ஆனந்தம், மோகினி, லட்சுமி வந்தாச்சு என பல தொடர்களில் நடித்திருக்கிறார்.
தான் நடித்ததில் அதிகமாக ரீச்சான சில கேரக்டர்களைப்பற்றி அவர் கூறுகையில், வைராக்கியத்தில் அப்பா கேரக்டரில் நடித்தேன். அதில் எனது மகன் என்னிடம் பாசமாக இருப்பான். ஆனால் மருமகள் மாமனாரான என்னை கொடுமைப்படுத்துவாள். தண்டச்சோறாகத்தான் வீட்டில் இருக்கிறார் என்று சொல்லி, மாவு ஆட்ட வைப்பாள், துணி துவைக்க வைப்பாள். குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்வாள். இப்படி என்னை நிறைய கொடுமைப்படுத்துவாள். இந்த சீரியல் எனக்கு பெண்கள் மத்தியில் நல்லதொரு இடம் பிடித்துக்கொடுத்தது.
அதையடுத்து, நான் பண்ணியதில் ரீச்சான சீரியல் ஏவிஎம்மின் நிம்மதி. இந்த தொடரில் என் கேரக்டர் பெயர் ஜீவா. தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோயில் போன்ற பகுதிகளுக்கு நான் சென்றபோது ஜீவா வந்திருக்கிறார் என்று அந்த கேரக்டர் பெயரை சொல்லி பலரும் பேசிக்கொண்டனர். அந்த தொடரில் விஷ்வா-மீனாகுமாரி ஹீரோ ஹீரோயினாக நடித்திருந்தனர்.
இந்த சீரியலில் எனது கேரக்டர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், எனது நண்பன் ஒரு கொலை வழக்கில் ஜெயிலுக்கு போய்விடுவார் . அப்போது அவனது 4 தங்கைகளுக்கும் அண்ணனாக இருந்து அவர்களுக்கு படிப்புக்கு தேவையான உதவிகளை செய்வேன் . அதைப்பார்த்து என் மனைவி சந்தேகப்படுவாள். அப்போது, என் நண்பன் ஜெயிலில் இருக்கான். அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது என்னோட பொறுப்பு என்பேன். அந்த கேரக்டருக்கு பெண்கள் மத்தியில் எனக்கு நல்ல ரீச் கிடைத்தது.