ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விளம்பரதாரர்களின் செல்வாக்கை பெற்ற டிவி சேனல்கள் மட்டுமே தாங்களே சீரியல்களை தயாரித்து ஒளிபரப்பி வருகின்றன. ஆனால், பாலிமர் போன்ற வளர்ந்து கொண்டிருக்கும் சேனல்களால் சொந்தமாக சீரியல் தயாரிக்கிற அளவுக்கு பட்ஜெட் இல்லை. அதன்காரணமாகத்தான் இந்தியில் தயாரிக்கப்பட்ட சீரியல்களின் தமிழ் உரிமையை வாங்கி வந்து டப்பிங் செய்து ஒளிபரப்பி வருகின்றன. மேலும், ஆரம்பத்தில் வடஇந்திய டிவி தொடர்களுக்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இல்லாதபோதும் சமீபகாலமாக டப்பிங் சீரியல்களையே பெருவாரியான பெண்கள் பார்க்கிற நிலை உருவாகி விட்டது.
அதற்கு காரணம், அந்த தொடர்களின் பிரமாண்டம். அதோடு நடிகைகளை குடம் குடமாக கண்ணீர் விடவைப்பதில்லை. யதார்த்தம் என்ற பெயரில் பெண்களை அதிக எளிமையாக காட்டாமல் முடிந்தவரை ரிச்சாகவே காட்டுகிறார்கள். அந்த வகையில், பாலிமர் சேனலில் புதுப்புது அர்த்தங்கள், இரு மலர்கள் என்ற இரண்டு சீரியல்களும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறதாம். அதனால், மேற்கொண்டும் வடஇந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட டிவித்தொடர்களை டப் செய்து வெளியிடவும் பாலிமர் டிவி முடிவு செய்திருக்கிறதாம். இதேபோல் மற்ற சேனல்களும் டப்பிங் சீரியல்களில் ஆர்வம் காட்டி வருவதால், முன்பைவிட தற்போது சீரியல்களின் டப்பிங் ரைட்ஸ் தொகை பன்மடங்கு உயர்ந்திருக்கிறதாம்.