மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
விலங்குகளை மையமாக கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கும் புகழ்பெற்ற நேஷனல் ஜியாகிரபி சேனல் கடவுளின் கதை (ஸ்டோரி ஆஃப் காட்) என்ற நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்ப இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஹாலிவுட் படங்களில் கடவுளாக நடிக்கும் மார்கென் ப்ரீமேன் தொகுத்து வழங்குகிறார்.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? உலகில் மதங்கள் எப்படி உருவானது, சில மதங்கள் மறைந்தது ஏன்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதேடி உலகம் முழுவதும் சுற்ற இருக்கிறார் மார்கன் ப்ரீமேன். ஜெருசலம், மெக்கா, இந்தியாவில் போதி மரம், அயோத்தி, மாயன் கோவில், கைலாஷ், காசி, எகிப்து பிரமிடு, உள்ளிட்ட பல கடவுள்களின் இடங்களுக்கு செல்கிறார். அகழ்வாரய்ச்சி நிபுணர்கள், சரித்திர ஆசிரியர்கள் ஆகியோரும் அவருடன் செல்கிறார்கள். அங்கு சென்று தான் பார்த்தவற்றை, சேகரித்த தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
ஒரு மனிதனுக்குள் கடவுள் எந்த அளவிற்கு ஆட்சி செய்கிறார் என்பதை மார்க்ன் ப்ரீமேனை சோதனைக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்யவும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ரெவல்யூசன் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிகழ்ச்சி 171 நாடுகளில், 44 மொழிகளில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் தமிழ் மொழியும் ஒன்று. உலகம் முழுவதும் இப்போதே நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.