ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒய்ஜிமகேந்திரனின் நாடகங்களில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக 8 ஆண்டுகளாக நடித்து வந்தவர் வீர பிரபாகரன். அவரது வியட்நாம்வீடு, நாடகம் உள்பட ஓய்.ஜி.மகேந்திரன் இதுவரை நடத்தியுள்ள 60 நாடகங்களில் 30 நாடகங்களில் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில், ஒய்.ஜியின் மகன், ஆபீசில் வேலை செய்பவர், டாக்டர் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்திருக்கிறார் இந்த வீர பிரபாகரன். இப்போது மலேசியாவில் ஒளிபரப்பாகி வரும் விண்மீன் என்ற தமிழ் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராகியிருக்கிறார். சரித்திரம் என்ற நிகழ்ச்சி மூலம் சுதந்திரத்திற்காக போராடிய வீரப்பாண்டிய கட்டபொம்மன், புலித்தேவன், பாரதியார், ஜான்சிராணி, உ.வே.சாமிநாத அய்யர், வ.உ.சிதம்பரனார் உள்பட 16 தலைவர்களைப்பற்றி 16 எபிசோடுகளில் தொகுத்து வழங்கியிருக்கிறார் வீரபிரபாகரன்.
இந்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, சாதாரணமான ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை விட இந்த மாதிரி சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளைப்பற்றி முதன்முதலாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புக் கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். குறிப்பாக, நம்ம ஊரில் உள்ள தலைவர்களின் வரலாரை மலேசிய தமிழர்களுக்கு அவர்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் இந்த நிகழ்ச்சியில் தெரியப்படுத்தி வருகிறோம். தற்போது சனி, ஞாயிறுகளில் இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரம் வீதம் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. மலேசிய மக்கள் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்கள் விண்மீன் தொலைக்காட்சியினர். இந்த நிகழ்ச்சியை அங்குள்ள மாணவர்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்று பெருமையான விசயம். அதோடு, அதை ரெக்கார்டு செய்து வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பதாக அவர்களது பெற்றோர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்தி வழங்கியவன் என்கிற முறையில் எனக்கு பெரிய சந்தோசம் கிடைத்திருக்கிறது என்கிறார் வீர பிரபாகரன்.