ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையை சேர்ந்த ஜி.அலெக்ஸ், பென்சீகர், ஆரோக்கியதாஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில் "தனியார் தொலைக்காட்சிகளில் ஆபாசமான நடனங்களும், ஆபாசமான வசனங்களும், வன்முறை காட்சிகளும் அதிகமாக ஒளிபரப்பாகிறது. இதனால் தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு தணிக்கை கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் கோர்ட் அளித்த தீர்ப்பு வருமாறு: இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதில் மனுவில். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை எதுவுமில்லை என்றாலும் கேபிள் டி.வி நெட்வொர்க் சட்டம் 1995ன்படி கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகள் மீறியதாகவோ, அல்லது வேறு விதமான புகார்கள் வந்தால் அதன் மீது தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க எலெக்ட்ரானிக் மீடியா கண்காணிப்பு மையமும் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. பொதுவான சட்டங்களை இயற்றுவது குறித்து அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதில் நீதிமன்றம் தலையிடவோ சட்டம் இயற்ற வற்புறுத்தவோ, உத்தரவிடவோ முடியாது. அரசுதான் முடிவு செய்ய வேண்டும். என்று தீர்ப்பு கூறியது.