ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு முன்னணி தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகள் ஆரம்பித்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நேரம். அப்போது ஒரு நிகழ்ச்சியில் சிம்பு நடுவராக இருந்தார். அந்த நிகழ்ச்சியில் பப்லு நடனம் ஆடினார். ஆனால் பப்புலுவின் நடனம் சரியில்லை என்று அவரை வெளியேறச் சொன்னார் சிம்பு. ஆனால் நான் நன்றாகத்தான் ஆடினேன் உங்களுக்குத்தான் நடனத்தை பற்றி தெரியவில்லை என்று பப்லு வாதம் பண்ணினார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து அப்போது இருவருமே பேச மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு "அது நாங்கள் பேசி வைத்து நடத்திய நாடகம்" என்று பப்லு கூறியிருக்கிறார். இது குறித்து சிம்பு கூறும்போது: அவர் பேசி வைத்து செய்தாரா என்பது எனக்குத் தெரியாது. என் தரப்பு நிஜமானது. எனது கோபம் நியாமானது உண்மையானது. அந்த நிகழ்வைகூட ஒளிபரப்பலாமா என்று என்னிடம் கேட்டுத்தான் ஒளிபரப்பினார்கள். பப்லு ஒரு காமெடிக்காக சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்" என்கிறார் சிம்பு.