ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமாவில் நடிக்க மும்பை கோல்கட்டாவிலிருந்து மாடல்களை அழைத்து வருவதைப்போல இப்போது சின்னத்திரை சீரியலில் நடிக்கவும் அங்கிருந்து மாடல்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அப்படி அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர் மனீஷா சட்டர்ஜி. தமிழுக்காக மனீஷா என்று பெயரை சுருக்கி வைத்திருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் சக்தி தொடர் 100 எபிசோட்களை தாண்டிவிட்டது.
தனக்கு வந்த சினிமா வாய்ப்பு அமலாபாலுக்கு சென்று விட்டது என்கிறார் மனீஷா. அவர் மேலும் கூறியதாவது: நான் கோல்கட்டாவில் பிறந்து வளர்ந்த பொண்ணு, மாடலிங்கும், உலக அழகி டைட்டிலும்தான் என் கனவாக இருந்தது. நடிப்பை பற்றி நான் நினைத்து பார்க்கவே இல்லை. மாடலிங்கில் பிசியாக இருந்தபோது வந்த சில இந்தி சீரியல்களைகூட தவிர்த்தேன். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்ததால் ஒத்துக் கொண்டேன்.
ஆரம்பத்தில் மொழி தெரியாமல், இங்குள்ள சூழல் பிடிபடாமல் தவித்தேன். இப்போது பழகிவிட்டது. எனது கேரக்டர் மூலம் தமிழ் கலாச்சாரத்தை கற்றுக் கொண்டேன். தமிழும் ஓரளவுக்கு பேச கற்றுக் கொண்டேன்.
மலையாளத்தில் ராஜீவ் பிள்ளை இயக்கும் மிலி படத்தில் நடிக்க எனக்குதான் வாய்ப்பு வந்தது. அது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர். சில காரணங்களால் என்னால் நடிக்க முடியவில்லை. இப்போது அமலாபால் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜீவ் பிள்ளையின் அடுத்த படத்தில் நான்தான் நடிக்கிறேன். அதோடு மலையாளத்தில் வெளிவந்த டிராபிக் படத்தின் இந்தி ரீமேக்கில் நான் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிக்கவும் ஆர்வம் இருக்கிறது. சினிமாவில் இருந்து பலர் சின்னத்திரைக்கு வரும்போது நான் ஏன் சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு போகக்கூடாது. என்கிறார் மனீஷா.