கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சீரியல்களில் நடிப்பது, தமிழ், மலையாளம், கன்னடம் என மாறி மாறி நடிப்பதுதான் இப்போது பேஷன். காரணம் கொட்டும் பணம். ஆனால் சமீதா ஒரு நேரத்தில் ஒரு சீரியல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். தற்போது பிள்ளைநிலா சீரியலில் நடிக்கும் அவர் வேறு சில சீரியல் வாய்ப்புகள் வந்தும் தவிர்த்து விட்டார். காரணத்தை அவரே சொல்கிறார்....
"ஒரு சீரியலில் சிறிய கேரக்டரில் நடிப்பவர்கள் வேறு சீரியலில் நடிக்கலாம். ஆனால் நாயகியாக நடிக்கும்போது ஒரு சீரியலில் நடித்தால்தான் அதில் கவனம் செலுத்த முடியும். இன்னொரு சீரியலில் நடிக்கும்போது காஸ்ட்யூமில் தொடங்கி மேனரிசம், வசன உச்சரிப்பு, அத்தனையிலும் வித்தியாசப்படுத்தி காட்டவேண்டும். ஒரு கேரக்டரில் இருந்து வெளியே வந்து அடுத்த கேரக்டருக்குள் நுழைய வேண்டும். இது சில நாள் சூட்டிங் நடக்கும் சினிமாவில் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். சின்னத்திரையில் முடியாது. எனவே தான் ஒரே நேரத்தில் ஒரு சீரியல் என்பதில் தெளிவாக இருக்கிறேன். பிள்ளைநிலா முடிந்த பிறகு அடுத்த சீரியலில் நடிப்பேன். அதுவரைக்கும் பிள்ளை நிலாவில்தான் கவனம் செலுத்துவேன்" என்கிறார் சமீதா.