ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லொள்ளுசபா காமெடி தொடர் மூலம் புகழ்பெற்றவர் மனோகர் வெறும் கைகளில் சக்கரம் சுற்றியபடி இழுத்து இழுத்து பேசும் புதிய ரக காமெடி மூலம் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டவர்.
லொள்ளுசபா நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் சினிமா இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இவருக்கு கீழ் வேலை பார்த்தவர்தான் சந்தானம். அவரே இவருக்கு நிறைய வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். தற்போது நண்பேன்டா படத்தில் சந்தானத்துடன் நடித்து வருகிறார்.
லொள்ளு சபா மனோகர் கார்ப்பரேஷன் வங்கியில் கேஷியராக இருக்கிறார். வேலை செய்து கொண்டே நடித்தும் வருகிறார். இன்னும் 10 ஆண்டுகள் சர்வீஸ் இருக்கும் நிலையில் வேலையை ராஜினாமா செய்து விட்டு நடிப்பில் தீவிரமாக குதிக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: நான் பேங்குல வேலை பார்க்குறதால பலபேர் நடிக்க கூப்பிட தயங்குறாங்க. பேங்குலேயும் நிறைய நாள் லீவு போட முடியாது. குடும்பத்தை ஓரளவுக்கு செட்டில் பண்ணிவிட்டேன். அதனால் வேலையை ராஜினாமா செய்யப்போகிறேன். சினிமா வளர்த்தாலும், சின்னத்திரைதான் வாழ்க்கை கொடுத்துச்சு, அதை மறக்க மாட்டேன். சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் இனி தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் மனோகர்.